ரோயல் பார்க் கொலை சம்பவம் : நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பினார் மைத்திரி

Maithripala Sirisena Supreme Court of Sri Lanka
By Sumithiran Mar 11, 2025 09:49 AM GMT
Report

புதிய இணைப்பு

ரோயல் பார்க் கொலை வழக்கில் பிரதிவாதிக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பு ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வழங்க உத்தரவிடப்பட்ட ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செலுத்திவிட்டதாக அவரது சட்டத்தரணி இன்று (11) உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இழப்பீடு வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டை பரிசீலித்த மூன்று நீதிபதிகள் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வு, இன்று காலை மைத்திரிபால சிறிசேனவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

அதன்படி, ஏப்ரல் 29 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டது.

தீர்ப்பு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, மைத்திரிபால சிறிசேன சார்பாக நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தனது கட்சிக்காரர் உரிய இழப்பீட்டை செலுத்தியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

பின்னர் இந்த விவகாரம் குறித்து ஒரு பிரேரணை மூலம் நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு சட்டத்தரணிக்கு நீதிபதிகள் குழு அறிவித்தது.

ரோயல் பார்க் கொலை சம்பவம் : உச்சநீதிமன்றிலிருந்து மைத்திரிக்கு பறந்த நோட்டீஸ்

ரோயல் பார்க் கொலை(royal park murder) வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டை செலுத்தத் தவறியதற்கான காரணத்தைக் விளக்குமாறு தெரிவித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு(maithripala sirisena) உச்ச நீதிமன்றம் இன்று(11) நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன, கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட ரூ.1 மில்லியன் இழப்பீட்டை முன்னாள் ஜனாதிபதி செலுத்தத் தவறிவிட்டதாக நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.

ஏன் தண்டனை வழங்கக்கூடாது..! 

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்டு, நீதிபதிகள் எஸ். துரைராஜா, யசந்த கோடகொட மற்றும் ஜனக் டி சில்வா ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அவருக்கு தண்டனை வழங்காமல் இருப்பதற்கான காரணத்தை ஏப்ரல் 29 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி சமர்ப்பிக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அறிவித்துள்ளது.

ரோயல் பார்க் கொலை சம்பவம் : நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பினார் மைத்திரி | Royal Park Victims Sc Notice To Maithripala

 கடந்த ஆண்டு இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டபோது, ​​அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஒரு மாதத்திற்குள் ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு அழைக்கப்பட்டபோது, ​​முன்னாள் ஜனாதிபதி முன்னிலையாகவில்லை, மேலும் அவர் சார்பாக ஒரு வழக்கறிஞர் கூட முன்னிலையாகவில்லை

வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதி விமான நிலையத்தில் அதிரடியாக கைது

வெளிநாடொன்றின் முன்னாள் ஜனாதிபதி விமான நிலையத்தில் அதிரடியாக கைது

  வெளிநாட்டு பெண் படுகொலை

மனுதாரர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜெயவர்தன மற்றும் சட்டத்தரணி ருக்‌ஷான் சேனாதீர ஆகியோர் முன்னிலையாகினர். இலங்கை வழக்கறிஞர்கள் சங்கத்திற்காக சாலிய பீரிஸ் முன்னிலையானார்.

ரோயல் பார்க் கொலை சம்பவம் : நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து தப்பினார் மைத்திரி | Royal Park Victims Sc Notice To Maithripala

 கடந்த 2005 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் திகதி, ராஜகிரிய பிரதேசத்தில் அமைந்துள்ள றோயல் பார்க் தொடர் மாடி வீடமைப்பு தொகுதியில் 19 வயதான இவோன் ஜோன்சன் என்ற வெளிநாட்டு யுவதி கொலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கோட்டாபய காலத்தில் நடந்த சம்பவம்: கடும் எதிர்ப்பு வெளியிட்ட முன்னாள் அமைச்சர்

கோட்டாபய காலத்தில் நடந்த சம்பவம்: கடும் எதிர்ப்பு வெளியிட்ட முன்னாள் அமைச்சர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில் கிழக்கு, மீசாலை வடக்கு, தாவளை

21 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Viborg, Denmark

19 Mar, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

18 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் மேற்கு, Sheerness, United Kingdom

20 Mar, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Calgary, Canada

18 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026