நோர்வே பிரஜைக்கு ஏற்பட்ட நிலை -யாழில் சகோதரிகள் இருவர் அதிரடியாக கைது
இலங்கையரான நோர்வே பிரஜையை ஏமாற்றி போலி வங்கி ஆவணங்களை பயன்படுத்தி 12 கோடி ரூபாவை மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு யுவதிகள் குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் வங்கியொன்றில் வர்த்தகரான உயிரிழந்த தமது தந்தையால் 100 கோடி ரூபாய் பணமும் அதிகளவான நகைகளும் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் அவற்றை சட்டரீதியில் மீளப்பெறவேண்டும் என்றும் கூறி, 2021 ஜனவரி முதல் ஜூன் வரை பல தடவைகளில் நோர்வே பிரஜையிடமிருந்து 12 கோடி ரூபாய் பணத்தை சகோதரிகள் இருவரும் பெற்றுள்ளனர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
23 வங்கி கணக்குகளில் இருந்து மீள பெறப்பட்ட பணம்
23 வங்கிக் கணக்குகளில் இருந்து பணம் மீளப் பெறப்பட்டுள்ளதாகவும் அந்தப் பணத்தின் ஒருபகுதி இன்னொரு நபரின் கணக்குக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்களை கைது செய்த சந்தர்ப்பத்தில் தெரியவந்துள்ளது.
இவர்களின் செயற்பாட்டில் சந்தேகமடைந்த இலங்கையரான நோர்வே பிரஜை செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர்களான சகோதரிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
போலி ஆவணங்கள் மூலம் மோசடி
அவர்களை கைது செய்த சந்தர்ப்பத்தில் யாழ். நீதிபதிகள், வங்கி முகாமையாளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கிராம சேவகர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகளின் முத்திரைகள் மற்றும் கையொப்பங்கள் அடங்கிய போலி ஆவணங்கள், மோசடிக்கு பயன்படுத்திய வங்கி புத்தகங்களும் மீட்கப்பட்டுள்ளன.
17ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட இருவரையும் 18ஆம் திகதியன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்திய போது, அவர்களை டிசம்பர் 1ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

வள்ளுவம், உலகப் பொதுமறை என்ற கருத்தியல் நீக்கம்! 3 நாட்கள் முன்

ராகுல் Vs மோடி - பூகோள அரசியலின் இருமுனைவாக்க அரசியல்
6 நாட்கள் முன்