பின் வாங்கியது ரஷ்யா..! முக்கிய நகரை மீட்டது உக்ரைன் ராணுவம்
ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைனின் முக்கிய நகரமான லைமன் நகரை உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
கடந்த ஏழரை மாதங்களாக உக்ரைன் ரஷ்யப்போர் நீடித்து கொண்டிருக்கிறது.
இப்போரில் உக்ரைன் நாட்டு நகரங்களை ரஷ்யப் படைகள் கைப்பற்றின. அதன் பின் சில பகுதிகள் ரஷ்யாவிடம் இருந்து உக்ரைன் ராணுவம் மீட்டது.
உத்தியோகபூர்வமாக அறிவித்தல்
இதற்கிடையே போரில் கைப்பற்றிய உக்ரைனின் நான்கு பிராந்தியங்களை ரஷியாவுடன் இணைப்பதாக ரஷ்யா உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.
இந்நிலையில் அந்த நான்கு பிராந்தியங்களின் ஒன்றான டொனெட்ஸ்க் பிராந்தியத்தின் லைமன் நகரை ரஷ்ய படையிடம் இருந்து உக்ரைன் ராணுவம் மீட்டுள்ளது.
ரஷ்யப் படைகள் பின் வாங்கின
கடந்த மாதங்களுக்கு முன் உக்ரைனின் கிழக்கு பகுதியில் உள்ள லைமன் நகரை ரஷ்ய படைகள் கைப்பற்றி இருந்தன.
அந்த நகரை மீட்க உக்ரைன் ராணுவத்தினர் சுற்றி வளைத்ததால் அங்கிருந்து ரஷ்யப் படைகள் பின் வாங்கின.
இதற்கிடையே ரஷிய அதிபர் புடினின் ஆதரவாளரான செச்சினியா பிராந்திய தலைவர் கதிரோவ் கூறும்போது, "எனது தனிப்பட்ட கருத்துப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். குறைந்த பாதிப்பு கொண்ட அணு ஆயுதத்தை உக்ரைனில் பயன்படுத்துவதை ரஷ்யா பரிசீலிக்க வேண்டும்" என்றார்.