உக்ரைனை தலைநகரை இன்றும் அதிரவைத்த ரஷ்ய ஏவுகணைகள்!
Russo-Ukrainian War
Europe
World
By Dhilak
உக்ரைன் தலைநகர் கீவ் மீது அதிகாலையிலேயே ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதல் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் காயமமைடைந்துள்ளதாக அந்நகர மேயர் விட்டாலி கிளிட்ச்கோ தெரிவித்துள்ளார்.
தாக்குதல் எச்சரிக்கை
தலைநகரில் நடத்தப்பட்ட தாக்குதல்களால் டினிப்ரோ நதியின் இருபுறமும் உள்ள இரண்டு பகுதிகளில், ஒரு சேமிப்புக் கிடங்கிலும் மற்றும் மக்கள் வசிக்காத ஒரு கட்டடத்திலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Image Credit: Foreign Policy
இந்த வான்வழித் தாக்குதல் எச்சரிக்கை சுமார் ஒரு மணி நேரம் நீடித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதற்கிடையில், நேற்று தெற்கு துறைமுக நகரான ஒடேசாவில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |