உக்ரைனில் மற்றுமொரு முக்கிய தளபதியை இழந்தது ரஷ்யா
உக்ரைன் மீதான படை நடவடிக்கையில் ரஷ்யா தனது 35வது இராணுவ கேணலை இழந்துள்ளது.
இராணுவ கேணல் மிகைல் நாகமோவ்(41) என்பவரே போரில் உயிரிழந்தவராவார். இவர் ரஷ்யாவின் மேற்கு எல்லை இராணுவ பகுதியின் சப்பர் படைப்பிரிவு கேணலாக தலைமை தாங்கி செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில் நாகமோவ் இறந்துவிட்டதை அவரது சொந்த பகுதியான ரஷ்யாவின் சஸ்லோங்கர் அரசு அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது. மேலும் அவரது இறுதிசடங்கள் மைதிச்சி பகுதியில் உள்ள கூட்டாட்சி இராணுவ நினைவு கல்லறையில் வைத்து நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி தொடங்கிய ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கையில் இதுவரை ரஷ்யா 20,000 இராணுவ வீரர்கள் வரை இழந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில், இது குறித்து ரஷ்யா எந்தவொரு அதிகாரபூர்வமான தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
