உக்ரைனில் ரஷ்யா பயங்கர தாக்குதல்! பொதுமக்கள் பலர் பலி
உக்ரைனின் கிழக்கு நகரமான பாலக்லியாவில் உள்ள வீடுகள் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதன்போது ஏற்பட்ட தீயை அணைக்கவும், இடிபாடுகளை அகற்றவும் மீட்புக் குழுவினர் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, வடக்கு சுமி பிராந்தியத்தில் உள்ள குடியிருப்புகள் மீது ரஷ்யப் படைகள் நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்ததுள்ளதாகவும், சுமார் 19 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய தாக்குதல்கள்
அத்தோடு, சுமி நகரிலேயே வான்வழி குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட மற்றுமொரு தாக்குதலில் மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் காவல்துறை தெரிவித்துள்ளது.

Image Credit: Reuters
தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் ஒரு வான் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 6 பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், 2022-ல் தொடங்கிய இந்தப் போரில், பொதுமக்களைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்துவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளுமே தொடர்ந்து மறுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |