ஈரானில் கேட்ட வெடிப்பு சத்தங்கள்! ஹோர்முஸ் நுழைவாயிலில் பதற்றம்
தெற்கு ஈரானில் வியாழக்கிழமை இரவு இரண்டு வெடிப்பு சத்தங்கள் கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி, குறித்த சத்தங்கள் ஹோர்முஸ் நீரிணையில் நுழைவாயிலுக்கு அருகில் இருந்த எதிரி இலக்குகளுக்கு எதிராக நடத்தப்பட்ட இராணுவ நடவடிக்கையுடன் தொடர்புடையவை என ஈரானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு நேரப்படி இரவு சுமார் 9.40 மணியளவில் கெஷ்ம் பகுதியில் இந்த வெடிப்புச் சத்தங்கள் கேட்டுள்ளன.
தீவிர விசாரணை
மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியில் ஈரானிய கடற்படையினர் மேற்கொண்ட இந்நடவடிக்கையின் முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image Credit: Al Jazeera
இதேவேளை, கெஷ்மிலோ அல்லது அருகில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுக நகரத்திலோ எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படவில்லை என ஹோர்மோஸ்கான் மாகாணத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான துணை ஆளுநர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வெடிப்புகளுக்கான பின்னணி மற்றும் காரணத்தை கண்டறிய ஈரானிய பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |