ரஷ்யாவின் தந்திர முன் நகர்வு- முக்கிய நகரைத் தட்டித்தூக்கும் நோக்கில் குவிக்கப்பட்ட துருப்புகள்!
Volodymyr Zelenskyy
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By Kalaimathy
உக்ரைன் மீதான ரஷ்ய போர் 106 நாட்களை கடந்துள்ளது. எனினும், நாட்டின் தலைநகரான கீவை ரஷ்யா கைப்பற்ற முடியாத நிலையில், மரியுபோல் உள்ளிட்ட முக்கிய நகரங்களை கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
இந்நிலையில் உக்ரைனின் டொன்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக கைப்பற்றும் நோக்குடன் ரஷ்யா முழு மூச்சில் போரில் ஈடுபட்டுள்ளது.
இது தொடர்பாக உக்ரைன் அதிபர் வொளாடிமிர் ஜெலன்ஸ்கி கூறுகையில்,
பேச்சுவார்த்தையில் விருப்பம் இல்லை
ரஷ்யா வலுவாக இருப்பதாக நினைப்பதால் போரை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை.
நாங்கள் ரஷ்யாவை பலவீனப்படுத்த விரும்புகிறோம். உலகமும் அதைச்செய்ய வேண்டும்.
டொன்பாஸில் நிலை கொண்டுள்ள ரஷ்ய படைகள்
தற்போது டொன்பாஸ் பகுதியில் உள்ள நகரங்களில் அந்நாட்டு துருப்புகள் நிலைகொண்டுள்ளனர்.
எப்படியிருந்தாலும் போர்க்களத்தில் செய்ய வேண்டிய பங்களிப்பை உக்ரைன் செய்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…? 5 நாட்கள் முன்
தாயுமான தலைவன்…!
5 நாட்கள் முன்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி