உக்ரைனுக்கு செல்லும் ஆயுத வாகனங்களை தகர்ப்போம் - பகிரங்கமாக எச்சரித்தது ரஷ்யா
அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. இந்தநிலையில் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா கடும் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதுகுறித்து ரஷ்யாவின் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் செர்காய் ரியப்கோவ் (Sergei Rybkov) கருத்துத் தெரிவிக்கையில்,
அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ஏராளமான ஆயுதங்களை உக்ரைனில் குவித்து வருகின்றன.
இது மிகவும் ஆபத்தான செயல். அதுபோன்று ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், ரஷ்ய இராணுவத்தின் சட்டப்பூர்வ தாக்குதலுக்கு இலக்குகள் என்பதே மேற்கத்திய நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்.
உக்ரைனுக்கு வெளிநாட்டு ஆயுதங்களை கொண்டு செல்லும் வாகனங்களும், ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும். ரஷ்யாவின் எச்சரிக்கையை அமெரிக்கா தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை.
இதனால் உக்ரைன் விவகாரத்தில் இரு நாடுகள் இடையே எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.