தமது தரப்பு உயிரிழப்பை முதன்முறையாக ஒப்புக் கொண்டது ரஷ்யா
உக்ரைன் மீதான போரில் ரஷ்ய ஆயுதப் படையில் உயிரிழப்புகள் ஏற்பட்டதை முதன்முறையாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது.
ஆனால் அதுகுறித்த எண்ணிக்கையை அது வெளியிடவில்லை.
“சிறப்பு ராணுவ நடவடிக்கையின்போது ரஷ்ய இராணுவத்தினர் சிலர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் இராணுவத்தினருக்கு காயங்களும் ஏற்பட்டுள்ளன” என பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதாக டாஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.
இதேவேளை போர் தொடங்கியதில் இருந்து இதுவரை உக்ரைன் நடத்திய பதில் தாக்குதல்களில் 4,300இற்கும் மேற்பட்ட ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவம் அறிவித்துள்ளது.
ரஷ்ய இராணுவத்தின் 146 பீரங்கிகள், 27 போர் விமானங்கள் மற்றும் 26 உலங்கு வானூர்திகள் ஆகியன சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் ரஷ்ய வீரர்கள் சிலரை போர்க் கைதிகளாக பிடித்து வைத்திருப்பதாகவும் உக்ரைன் இராணுவம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.