உக்ரைனை சரமாரியாக தாக்கும் ரஷ்யா! பரிதாபமாக பலியாகும் உயிர்கள்
உக்ரைனின் மூன்று வெவ்வேறு பிராந்தியங்களில் ரஷ்யப் படைகள் நடத்திய கடுமையான தாக்குதல்களில் ஆறு பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டின் பிராந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்கிழக்கு டினிப்ரோபெட்ரோவ்ஸ்க் பிராந்தியத்தில் ட்ரோன்கள், பீரங்கிகள் மற்றும் குண்டுகள் மூலம் 50 இற்கும் மேற்பட்ட தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஸபோரிஷியா அணுமின் நிலையத்திற்கு எதிரே, டினிப்ரோ ஆற்றின் மறுகரையில் அமைந்துள்ள நிகோபோல் நகருக்கு அருகில் இருவர் உட்பட இப்பகுதியில் மொத்தம் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ரஷ்யப் படைகளின் தாக்குதல்
மேலும் 12 பேர் காயமடைந்துள்ளதாக பிராந்திய ஆளுநர் ஒலெக்சாண்டர் ஹன்ஷா தெரிவித்துள்ளார்.

Image Credit: NBC News
இதற்கிடையில், சமீபகாலமாக அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகும் ஸபோரிஷியா நகரின் வடகிழக்கு பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் 17 பேர் காயமடைந்தனர் என்று பிராந்திய ஆளுநர் இவான் ஃபெடோரோவ் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ரஷ்ய எல்லையை ஒட்டியுள்ள சுமி நகரில், ரஷ்யப் படைகள் வீசிய குண்டுகள் காரணமாக ஒருவர் பலியானதாக பிராந்திய ஆளுநர் ஓலே ஹிரிகோரோவ் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல…
4 நாட்கள் முன்