தொலைக்காட்சியில் போரை நிறுத்துங்கள் என திடீரென கோஷமிட்ட பெண் ஊழியரை சிறையில் அடைத்தது ரஷ்யா
ரஷ்ய செய்திசேவை நேரலையில் "போரை நிறுத்துங்கள்" என்ற பதாகையுடன் திடீரென நுழைந்த பெண் ஊழியர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ரஷ்யாவின் அரசு செய்தி தொலைக்காட்சி ஒன்றில் பெண் தொகுப்பாளர் நேரலையில் செய்தி வாசித்து கொண்டு இருந்த போது " போரை நிறுத்துங்கள் என்ற முழக்கத்தோடு கையில் பதாகையை ஏந்தி கொண்டு அங்கே வேலை செய்யும் மற்றொரு பெண் ஊழியர் (மெரினா ஓவ்சியனிகோவா) திடீரென உள்ளே நுழைந்தார்.
ஆங்கிலம் மற்றும் ரஷ்ய மொழியில் அந்த பதாகையில் எழுத்துக்கள் இடம்பெற்று இருந்தது .அதில்,"போர் வேண்டாம். போரை நிறுத்துங்கள். பிரசாரத்தை நம்பாதீர்கள். உங்களிடம் பொய் சொல்கிறார்கள் " என எழுதப்பட்டு இருந்தது.
இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவியது. இதனை தொடர்ந்து ரஷ்யாவின் இராணுவத்தை இழிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டதாகவும் ரஷ்ய இராணுவத்தை பற்றி தவறான தகவல்களை பரப்பியதற்காகவும் மெரினா ஓவ்சியனிகோவாவை ரஷ்ய காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு 10 நாட்கள் சிறைத்தண்டனை வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
