அநுர அரசை புகழ்ந்து தள்ளும் முன்னாள் அமைச்சர்
S B Dissanayake
National People's Power - NPP
NPP Government
By Jaso
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உலகை வென்று மிகச் சிறப்பாக முன்னேறி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்தார்.
எஸ்.பி. திசாநாயக்க ஊடக சந்திப்பை நடத்தி உரையாற்றும் போது மேற்கண்டவாறு கூறினார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
இந்தப் பயணத்தில் ஜப்பான், சீனா மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் இலங்கைக்கு உதவும் என்று தான் நம்புவதாகக் கூறிய முன்னாள் அமைச்சர், சீன கம்யூனிஸ்ட் அரசாங்கம் செய்தது போல் முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை வளர்ப்பதன் மூலம் முதலீட்டாளர்களை தாமதமின்றி நாட்டிற்கு அழைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
பலவீனமடையும் எதிர்க்கட்சி
அரசாங்கம் வலுவடைந்து வருவதாகவும், எதிர்க்கட்சி நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |