இலங்கை சிறைச்சாலைகளில் 27 இந்தியர்கள்! அச்சநிலையை மையப்படுத்தி ஜெயசங்கர் அறிக்கை
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் குறித்து இந்தியா விசேட நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 ஆம் ஆண்டு ஜூலை மாத இறுதிக்குள் 27 தமிழக கடற்றொழிலாளர்கள் இலங்கை சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய நாடாளுமன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் வழங்கும் போது அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான கடற்றொழிலாளர்கள்
மேலும், தமிழக கடற்றொழிலாளர்களுக்கு சொந்தமான 249 கடற்றொழில் படகுகள் இலங்கை பாதுகாப்பு அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதன்படி இந்திய கடற்றொழிலார்களில் பாதுகாப்பும் நலனும் மத்திய அரசின் உயர்ந்த முன்னுரிமைகளில் ஒன்றாக இது இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட கடற்றொழிலாளர்களையும் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளையும் விரைவாக விடுவித்து இந்தியாவிற்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக, இலங்கை அரசுடன் இருதரப்பு செயல்முறைகள், இராஜதந்திர வழிகள் மற்றும் பல்வேறு அதிகாரப்பூர்வ, உயர்மட்ட சந்திப்புகள் மூலம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 2021 ஆம் ஆண்டு முதல் இதுவரை இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,554 ஆக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அவர்களில் சுமார் 10 பேர் பாதுகாப்புப் படையினரின் தாக்குதலுக்கு உள்ளானதாக பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |