ரெலோவின் யாழ் மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் தெரிவு
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (TELO) யாழ் மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ் (Saba Kugathas) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ். மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் நேற்று (27) கச்சேரியடியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்ற போதே அவர் தெரிவு செய்யப்பட்டார்.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24 மற்று 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
தெரிவுக் கூட்டங்கள்
இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

அந்தவகையில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டதுடன் பொதுக்குழு உறுப்பினர்களாக 45 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில் 12வது மாநாடு அமையவுள்ளதாக ரெலோ கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |