ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சஜித் மீது அதிருப்தி!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது இந்திய விஜயத்தின் போது தனது கட்சியின் எந்த நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்துச் செல்லாதது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பாக கட்சித் தலைமையை கடுமையாக விமர்சித்துள்ளதாகவும் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உத்தியோகபூர்வ விஜயம்
எதிர்க்கட்சித் தலைவர் இதுபோன்ற உத்தியோகபூர்வ கூட்டங்களுக்குச் செல்லும்போது பொருளாதாரம் மற்றும் வெளியுறவு உள்ளிட்ட குறிப்பிட்ட விடயங்களில் நல்ல அறிவுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது ஈடுபடுத்தியிருந்தால் அது மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும் என கட்சியில் உள்ள பலர் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவரின் இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தில் அவரும் மற்றொரு கட்சி அதிகாரியும் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.
இந்த விஜயத்தின் போது, எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவில் உள்ள பல நாட்டுத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |