மூத்த அரசியல்வாதியை தேடிச் சென்ற சஜித்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (11) காலை இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான ரோனி டி மெலின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்து அவருக்கு நீண்ட மற்றும் வளமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
ரோனி டி மெல் 1977 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்த்தன அரசாங்கத்தில் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சராக இருந்த அவர், மேலும் திறந்த பொருளாதாரத்தை நாட்டிற்கு அறிமுகப்படுத்துவதில் முன்னோடிகளில் ஒருவராக செயற்பட்டவர்.
அவர் 11 வரவு செலவுத் திட்ட அறிக்கைகளை முன்வைத்து இலங்கையில் சாதனை நிதி அமைச்சராக பணியாற்றியுள்ளார்.
பிரதேச அபிவிருத்தி வங்கியை நாட்டில் உருவாக்குவதில் முன்னோடியாக செயற்பட்டவர். சமகால அரசியல் விடயங்கள் குறித்து கலந்துரையாடிய அவர்,எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச ஆற்றிவரும் செயற்பாடுகள் குறித்து மிகுந்த பாராட்டுக்களைத் தெரிவித்தார்.
எதிர் காலத்தில் இந் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்லும் ஆற்றல் மிக்க ஒருவராக சஜித் பிரேமதாசவை அடையாளப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.