அடிவருடிகளைத் திருப்திப்படுத்தவே அரசாங்கம் புதிய புதிய திட்டங்களை வகுக்கின்றது - சபையில் எதிர்க்கட்சித் தலைவர் குற்றச்சாட்டு
அரசாங்கமானது புதிதாக ஒரு வேலைத் திட்டத்தினை ஆரம்பித்துள்ளது. இதன் மூலமாக உழைக்கும் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கப்பார்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
இதில் கிடைக்கும் ஊழியர் சேமலாப நிதியத்தில் 25சதவீத வரியினை விதித்து இந்த ஒரு லட்சம் வேலைத்திட்டத்தின் மூலம் தமது அடிவருடிகளை திருப்திப்படுத்தப் பார்க்கின்றது என்றும் இந்த மோசமான செயலை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வில் இன்றையதினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,
இந்த நாட்டு மக்களுடைய - உழைக்கும் மக்களின் ஊழியர் சேமலாப நிதியை சூறையாடும் வேலைத்திட்டத்தினூடாக முயலக் கூடாது. இந்த வர்த்தமானியை ரத்து செய்யவேண்டும்.
கடந்த காலங்களில் பல்வேறுமுறைகளில் இந்த நிதியத்தை சூறையாடியவர்கள் தான் இன்று ஆட்சி செய்கின்றார்கள். இந்த நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பணவீக்கம் - விலை அதிகரிப்பை நினைத்து எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் கவலை அடைகின்றேன்.
இதனை அரசாங்கம் புதினமாகப் பார்க்கின்றனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே குறுக்கிட்ட நெடுச்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,
தவிசாளரே, அவர் 27/2 4கீழ் எழுத்துமூலமாகக் கேள்விகளைக் கேட்டிருக்கின்றார். அவர் கூற்று ஒன்றை முன்வைத்தார். அதற்கு எமுத்துமூலமாகத் தான் பதிலளிப்போம் என்று தான் சொன்னோம் எனத் தெரிவித்துள்ளார்.