இனப்படுகொலை செய்யும் அரசாங்கமே ஆட்சியில் உள்ளது! எதிர்க்கட்சித் தலைவர் காட்டம்
அரசாங்கம் என்ற ஒன்று அமைக்கப்படுவது மக்களைக் காக்கவே எனவும், துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் கொல்கிறது. இவ்வாறு நோக்கும் போது தற்போதைய அரசாங்கம் இனப்படுகொலை செய்யும் அரசாங்கமாகவே உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.
வால்வு மாற்றத்தினால் எரிவாயு பிரச்சினை இன்னும் சில வாரங்களுக்கு தீர்க்கப்படாது என அரசாங்கப் பிரதிநிதிகள் கூறுவதாகவும் உண்மையில் மாறியது எரிவாயு வால்வுகள் அல்ல, அரசாங்க வால்வுகளே காரணம் எனவே, வால்வுகளை மாற்றியுள்ள அரசாங்கத்தை விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்க மக்கள் அணிதிரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இணை ஊடகப் பேச்சாளருமான எஸ்.எம்.மரிக்காரின் கொலன்னாவ தேர்தல் தொகுதியின் வாக்களிப்பு நிலையங்களின் தலைவர்கள் நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.
இதன்போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
எரிவாயு அனர்த்தம் தொடங்கிய நாள் முதல் எதிர்க்கட்சி என்ற வகையில் ஐக்கிய மக்கள் சக்தி அனைத்து தகவல்களையும் நாட்டிற்கு அம்பலமாகியுள்ளது.
விடயத்திற்குப் பொறுப்பான இரண்டு அமைச்சர்கள் உட்பட முழு அரசாங்கமும் பதில் சொல்லாமல் தப்பிச் சென்றுள்ளனர். வீடுகள் வெடித்துச் சிதறும், சமையல் அறைகள் எரியும், உயிர் பலியாகும் பாரிய அவலத்தை உருவாக்கியவர்கள் விடயத்திற்கு பொறுப்பான இரு அமைச்சர்கள் இருந்துள்ளனர்.
அன்று இருவரும் பொய் சொன்னதாகவும், இன்று எரிவாயு நிறுவனத்தின் தலைவர், அவர்கள் சார்பாக பொய் சொல்ல முன்வந்துள்ளதாகவும் கூறினார்.
அரசாங்கம் என்ற ஒன்று அமைக்கப்படுவது மக்களைக் காக்கவே எனவும், துரதிஷ்டவசமாக இலங்கை அரசாங்கம் மக்களைக் கொல்லாமல் கொல்கிறது. இவ்வாறு நோக்கும் போது தற்போதைய அரசாங்கம் இனப்படுகொலை செய்யும் அரசாங்கமாகவே உள்ளது.
மக்களின் கண்ணீரின் வலியை அரசாங்கம் பொருட்படுத்தவில்லை. ஈஸ்டர் தாக்குதல் போன்ற நிகழ்வுகளின் மூலம் பிணங்களின் மீது ஆட்சிக்கு வந்த இந்த அரசாங்கம், மக்களின் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் அக்கறை காட்டவில்லை.
தாங்க முடியாத அழுத்தத்தை எதிர்கொண்டு நாட்டை ஆளாக்குபவர்கள் மீது கூச்சல் போட்டு மக்கள் தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். வெட்கக்கேடானது என்பதற்கு காரணம், அவர்களைப் பின்தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் திணைக்களத்திற்கு வரவழைக்கப்படும் அளவுக்கு கீழ் மட்டத்தற்கு விழுந்து விட்டமையே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.