சுகாதார துறையினரின் ஒரு தரப்பினருக்கு ஜனவரி முதல் சம்பள உயர்வு
குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதத்தில் உரிய சம்பள உயர்வை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்காலத்தில் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் பணி நடவடிக்கைகளுக்காக மோட்டார் சைக்கிள்களை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
கொழும்பில் நேற்று (26) நடைபெற்ற நிர்வாகக் குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர் பயிற்சியை நிறைவு செய்த 275 உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
உலக சுகாதார மாநாடு
இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதாரம் தற்போது ஸ்திரமான நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் மக்களுக்குக் மேலதிக சுமையைக் கொடுக்காமல் அரசாங்கம் பொருளாதாரத்தை முகாமைத்துவம் செய்து வருகின்றது.

தேசிய சுகாதார அறிவியல் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பில், நாடு முழுவதுமுள்ள 11 பயிற்சி மையங்களில் இப்பயிற்சி நடத்தப்பட்டுள்ளது.
தாய் மற்றும் சேய் சுகாதார மேம்பாடு, சுகாதாரக் கல்வியை வழங்குதல் மற்றும் குடும்ப சுகாதார ஊழியர்களின் களப் பணிகளைக் கண்காணித்தல் உள்ளிட்ட பொறுப்புகள் இந்த உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
உலக சுகாதார அமைப்பின் இம்முறை உலக சுகாதார மாநாட்டில் இலங்கையின் இலவச சுகாதார சேவைக்குச் விசேட அங்கீகாரம் கிடைத்துள்ளது, அதன் பெருமையில் பெரும் பங்கு குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பால் கிடைத்ததாகும்“ என தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |