தனியார் துறை ஊழியர்களுக்கு மகிழ்ச்சி தகவல் : அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்
அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறையின் ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் படி, அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்கு இணையாக தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தையும் உயர்த்துவதற்கு முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் மற்றும் தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளத்தை திருத்துவதற்கும், அதனுடன் தொடர்புடைய ஏனைய சட்ட நடவடிக்கைகளை பின்பற்றுவதற்கும் தொழில் அமைச்சர் முன்வைத்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
மாதாந்திர சம்பளம்
இதன்படி, 2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் 17,500 ரூபாவிலிருந்து 27,000 ரூபாவாக 9,500 ரூபாவால் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025 ஏப்ரல் 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 700 ரூபாவிலிருந்து 1,080 ரூபாவாக 380 ரூபாவால் உயர்த்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
2026 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக 3,000 ரூபாவால் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், 2026 ஜனவரி 01 முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தேசிய குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1,080 ரூபாவிலிருந்து 1,200 ரூபாவாக 120 ரூபாவால் உயர்த்தப்படும் என்பதுகுறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
