சம்பூர் - திரியாய் கிராம நிலப்பிரச்சினை : ஆவண வெளியீட்டு நிகழ்ச்சி

Sri Lankan Tamils Tamils Trincomalee Sri Lanka
By Shalini Balachandran May 25, 2025 05:20 PM GMT
Report

சம்பூர் மற்றும் திரியாய் கிராம நிலப்பிரச்சினை தொடர்பாக ஆவணப்படங்கள் வெளியிடும் நிகழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழச்சி இன்று (25) திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் யுத்தம் நிறைவு பெற்ற நிலையிலும் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் நில உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது.

அறுகம்குடாவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : முற்றாக மறுக்கும் காவல்துறை

அறுகம்குடாவில் ஏற்பட்டுள்ள குழப்பம் : முற்றாக மறுக்கும் காவல்துறை

 பல சந்திப்பு

இந்தநிலையில், வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் தமிழ் முஸ்லிம் மக்களின் பல ஆயிரம் ஏக்கர் பூர்வீக குடியிருப்பு மற்றும் ஜீவனோபாய நிலங்கள் அரசின் பல தரப்பட்ட பொறிமுறைகளின் மூலம் சட்ட ரீதியாகவும் எந்த விதமான சட்ட ஏற்பாடுகளும் இன்றியும் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

இன்று வரை இம்மக்கள் நில மீட்பிற்கான பல தரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும் எந்தக் காணிகளும் விடுவிக்கப்படாமல் மீண்டும் மீண்டும் கையகப்படுத்தப்பட்டு வருகின்ற நிலை தொடர்கின்றது.

சம்பூர் - திரியாய் கிராம நிலப்பிரச்சினை : ஆவண வெளியீட்டு நிகழ்ச்சி | Sambur Land Issue Document Release Program

குறித்த நடவடிக்கை திருகோணமலை மாவட்டத்தில் சமீப காலமாக அதிகமாக தொடர்வதை காணக்கூடியதாக உள்ளது.

குறிப்பாக பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்களது நில மீட்பிற்கான பல ஜனநாயக போராட்டங்கள், மாநாடுகள் மற்றும் தேசிய சர்வதேச சமூகங்களுடன் பல சந்திப்புக்களை மேற்கொண்ட போதும் இன்னும் மக்களுக்கான தீர்வுகள் கிடைக்கப் பெறவில்லை.

யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு

யார் அகதி..! : உலகத்தமிழர்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய தீர்ப்பு

மக்கள் அமைப்பு

இந்தநிலையில், வடக்கு கிழக்கு மாகாணத்தில் பல ஆயிரம் மக்கள் நிலத்தை இழந்தவர்களாக இருக்கின்றமையினால் திருகோணமலை மாவட்டத்திலுள்ள சம்பூர் மற்றும் திரியாய் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக இன்னுமொரு வடிவமாக நிலத்தை இழந்த மக்களின் வலியை சுமந்ததான இரு ஆவணப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

சம்பூர் - திரியாய் கிராம நிலப்பிரச்சினை : ஆவண வெளியீட்டு நிகழ்ச்சி | Sambur Land Issue Document Release Program

திருகோணமலை மாவட்டத்தில் அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்பு என்பன இணைந்து குறித்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளன.

இந்தநிகழ்வானது அகம் மனிதாபிமான வள நிலையம் மற்றும் சூழலியல் நீதிக்கான மக்கள் அமைப்புக்களின் பணிப்பாளர் கண்டுமணி லவகுசராசா தலைமையில் இடம்பெற்றுள்ளது.

வடக்கு - கிழக்கில் இடம்பெற்றது போர் இல்லையாம் : அடித்துக் கூறும் சவேந்திர சில்வா

வடக்கு - கிழக்கில் இடம்பெற்றது போர் இல்லையாம் : அடித்துக் கூறும் சவேந்திர சில்வா

காணிப் பிரச்சினை

தொடர்ந்து நிகழ்ச்சியில், திருமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குகதாசன், திருமலை மறை மாவட்ட பேராயர், கிழக்கு மாகாண ஆளுனரின் பிரத்தியேக செயலாளர், திருமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர், இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்ட பிராந்திய இணைப்பாளர், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளர் பிரசாந்தினி உதயகுமார், சிவில் அமைப்புப் பிரதிநிதிகள், சட்டத்தரணிகள், மனித உரிமை பாதுகாவலர்கள், பாதிக்கப்பட்ட மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

சம்பூர் - திரியாய் கிராம நிலப்பிரச்சினை : ஆவண வெளியீட்டு நிகழ்ச்சி | Sambur Land Issue Document Release Program

நிகழ்ச்சியில் தலைமையுரையை தொடர்ந்து இரண்டு ஆவணப்படங்களும் திரையிடப்பட்டுள்ளது.

மேற்படி சம்பூர் மற்றும் திரியாய் கிராம மக்களின் காணிப் பிரச்சினை தொடர்பாக கடந்த காலங்களில் ஜனநாயக மற்றும் சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களான சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார், ஜனாப் சைபுதீன், சம்பூர் கிராம நிலப்பிரனை தொடர்பாக துஸ்யந்தன் மற்றும் பா.பிரியங்கன் ஆகியோரினால் இப்பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய அரசியல் தலைவர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் கருத்துக்களும் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு வைத்தியசாலையின் பெரும் பதவியில் வெற்றிடம்: மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

கொழும்பு வைத்தியசாலையின் பெரும் பதவியில் வெற்றிடம்: மக்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021