எரிபொருள் தட்டுப்பாடால் இலங்கையில் ஸ்கூட்டருக்கு லிஃப்ட் கொடுத்த ஸ்கூட்டர்!
Viral Video
Southern Province
By Dharu
எரிபொருள் தட்டுப்பாடால் மஹியங்கனை பகுதியில் இடம்பெற்ற வினோதமான சம்பவம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களை சல்லடை போட்டுத் தேடிய இரு நண்பர்களுக்கு, இறுதியில் ஒரு ஸ்கூட்டருக்கு மட்டுமே பெட்ரோல் கிடைத்துள்ளது.
மற்றைய ஸ்கூட்டர் பாதியிலேயே விட்டுச் செல்ல மனமில்லாத அந்த இளைஞர்கள் ஒரு சிறப்பு முடிவை எடுத்ததுள்ளனர்.
மூடப்பட்டுள்ள எரிபொருள் நிலையங்கள்
ஒரு மோட்டார் சைக்கிளை(ஸ்கூட்டரை) ஓட்டிச் செல்ல, மற்றைய மோட்டார் சைக்கிளை இருவருக்கும் இடையில் லாவகமாகச் ஏற்றிச் சென்றுள்ளனர்.

மஹியங்கனையில் பெரும்பாலான எரிபொருள் நிலையங்கள் மூடப்பட்டுள்ள நிலையில், வாகன ஓட்டிகள் படும் அவஸ்தையையும், அவர்களின் சமயோசித புத்தியையும் ஒருசேரக் காட்டும் இந்த காணொளி தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |