நாட்டை வந்தடையும் மற்றுமொரு கச்சா எண்ணெய் கப்பல்
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல்கள் ஆரம்பித்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கு தேவையான கச்சா எண்ணெயைத் தாங்கிய இரண்டாவது கப்பல் நாட்டை வந்தடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த கப்பல் இன்று (26.04.2026) பிற்பகல் இலங்கையை வந்தடையவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய களஞ்சிய முனைய நிறுவனம் (CPSTL) தெரிவித்துள்ளது.
இந்த கப்பல் சுமார் 90,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றி வருவதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு
அத்துடன் மே மாத இறுதி வரை மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்துத் தேவைகளுக்கான பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் ஆகியன போதுமான அளவு இருப்பில் உள்ளதாக பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் உறுதிப்படுத்தியுள்ளது.

இந்தத் தொடர்ச்சியான வருகைகள் காரணமாக, நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் தேவையற்றது என அதிகாரிகள் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தியுள்ளனர்.
பரபரப்பு சம்பவம்: வெள்ளை மாளிகை விருந்தில் துப்பாக்கிச் சூடு - இலக்கு வைக்கப்பட்ட ஜனாதிபதி ட்ரம்ப்..!
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்