ஈரானுக்குள் அமெரிக்கா பயன்படுத்திய இரகசிய விமானத்தளம்!
தென்மேற்கு ஈரானின் வான்பரப்பில் வெள்ளிக்கிழமை அன்று ஒரு F-15E விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அந்த விமானப்படை வீரரின் துயரம் தொடங்கியதோடு ஈரானுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான போரின் முக்கிய கட்டமும் ஆரம்பமானது.
இதில் போர் மண்டலத்திற்குள் அமெரிக்க விமானப்படை வீரர் ஒருவர் காணாமல் போனதாகப் பரவிய செய்திகளைத் தொடர்ந்து, அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் விரைவில் வெளியானது.
ஈரானியப் பாதுகாப்புப் படைகளை விபத்து நடந்த இடத்திலிருந்து திசைதிருப்பி, மற்றப் பகுதிகளை நோக்கி ஈர்க்கும் வகையில்" தாக்குதல்களை நடத்தியது உட்பட, இந்த நடவடிக்கைக்கு இஸ்ரேலியப் பாதுகாப்புப் படை (IDF) உதவியதாக இஸ்ரேலிய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
அழிக்கப்பட்ட சி-130
குழுவினரை அழைத்து வர அனுப்பப்பட்ட மூன்று கூடுதல் விமானங்களில் அமெரிக்க சிறப்புப் படைகள் ஈரானிலிருந்து புறப்பட்டதாகவும், இந்த நடவடிக்கைக்கு ஈரானில் உள்ள ஒரு அடிப்படை விமானத்தளம் பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மீட்புக் குழுவினர் மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு சி-130 போக்குவரத்து விமானங்கள், ஈரானில் தரையிறங்குவதற்காகப் பயன்படுத்திய தொலைதூரத் தளத்தில் மண்ணில் புதைந்து போனதால் புறப்பட முடியாத நிலையை எட்டியுள்ளது.
இந்நிலையில் எதிரிகளின் கைகளில் சிக்காமல் இருப்பதற்காக அவை அழிக்கப்பட்டதாகவும், இது இராணுவத்தின் வழக்கமான நடைமுறை என்றும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனினும் இந்த நடவடிக்கையின்போது இரண்டு அமெரிக்க சி-130 ராணுவப் போக்குவரத்து விமானங்களும் இரண்டு பிளாக் ஹாக் உலங்கு வானூர்திகள் அழிக்கப்பட்டதாகவும், "தெற்கு இஸ்பஹானில் உள்ள கைவிடப்பட்ட விமான நிலையம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஏமாற்று மற்றும் தப்பிக்கும் திட்டம் முற்றிலுமாக முறியடிக்கப்பட்டது" என்றும் ஈரான் இராணுவம் கூறியது.
ஆனால், தாங்கள் தாக்குதலுக்கு உள்ளானதை அமெரிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
ஈரானின் பொருளாதார முதுகெலும்பான சவுத் பார்ஸ் ஆலை மீது தாக்குதல்: அடுத்தடுத்துப் பலத்த வெடிப்புச் சத்தங்கள்
பென்டகனுக்குத் தகவல்
இஸ்பஹான் நகரத்திலிருந்து சுமார் 50 கி.மீ (30 மைல்கள்) தென்கிழக்கில், மத்திய ஈரானின் ஒரு மலைப்பகுதியில் புகைந்துகொண்டிருந்த விமானத்தின் உடைந்த பாகங்களை அப்போது வெளியாகிய செய்திகளும், காணொளிகளும், புகைப்படங்களும் காட்டியிருந்தன.

காணாமல் போன விமானப்படை வீரரைத் தேடிக்கொண்டிருந்தபோது, இஸ்பஹானுக்கு மேலே பறந்த அமெரிக்க ஆளில்லா விமானம் ஒன்றை இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் (IRGC) சுட்டு வீழ்த்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
எனினும் இந்த கருத்துக்கள் தொடர்பில் எந்த உறுதிப்படுத்தல்களும் வெளியாகவில்லை.
அமெரிக்க ஊடகங்களில் வெளியான செய்திகளின்படி, விபத்துக்குள்ளான விமானத்தின் விமானப்படை வீரர், தனது சமிக்ஞையை ஈரான் ஒட்டுக் கேட்டுவிடக்கூடும் என்ற அச்சத்தில், ஒரு மலைப் பிளவில் ஒளிந்துகொண்டு, அதன் பயன்பாட்டையும் கட்டுப்படுத்தியுள்ளார்.
சி.ஐ.ஏ அந்த விமானியின் துல்லியமான இருப்பிடத்தைக் கண்டறிந்து பென்டகனுக்குத் தகவல் தெரிவித்ததாகவும், அவ்வாறு செய்திருந்தால் அந்த பீக்கான் சமிக்ஞை ஈரானின் பொறியாக இருப்பதற்கான சாத்தியக்கூறையும் பென்டகன் நிராகரிக்க வேண்டியிருந்திருக்கும் என்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
ஒவ்வொரு மணி நேரமும் நம்மை நெருங்கிக் கொண்டிருந்த நமது எதிரிகளால் அவர் வேட்டையாடப்பட்டு வந்ததால், காயமடைந்த விமானப்படை வீரரின் இருப்பிடம் '24 மணி நேரமும்' கண்காணிக்கப்பட்டு வந்தது" என்று டொனால்ட் ட்ரம்ப் பின்னர் கூறினார்.
இவ்வாறான பின்னணியிலேயே அமெரிக்கப் படைகள் அவரைக் கண்டுபிடித்துவிட்டதாகப் பொய்யாகப் பரப்பி, சி.ஐ.ஏ ஈரானுக்குள் ஒரு ஏமாற்றுப் பிரசாரத்தையும் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
பல விமானங்களில் இருந்த அமெரிக்க சிறப்புப் படைகள், சிக்கிக்கொண்ட அதிகாரியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தபோது, ஈரானியப் படைகளை அப்பகுதியிலிருந்து விலக்கி வைப்பதற்காகத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்தத் தாக்குதல்களுக்கு உதவுவதற்காக, 7,000 அடி உயரமான மலைத்தொடரில் இருந்த தனது மறைவிடத்திலிருந்து ஈரானிய நிலைகள் குறித்த தகவல்களை அந்த விமானப்படை வீரர் பரிமாறிக்கொண்டதாக கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |