உலக புலனாய்வு தலைவர்களின் இரகசிய மாநாடு சிங்கப்பூரில்!
உலகின் இருபது முக்கிய புலனாய்வு அமைப்புகளின் மூத்த அதிகாரிகள் சிங்கப்பூரில் இரகசியக் கூட்டமொன்றை நடத்தியதாக கூறப்பட்டுள்ளது.
இந்த வார இறுதியில் சிங்கப்பூரில் நடைபெற்ற ஷங்ரிலா உரையாடல் பாதுகாப்புக் கூட்டத்தின் முடிவில் புலனாய்வு அமைப்புகளின் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பான தகவலை சர்வதேச செய்தி நிறுவனம் உலக வல்லரசு நாடுகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
சந்திப்பில் சீனா
வல்லரசு நாடுகளுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பின் அவ்ரில் ஹெய்ன்ஸ், இந்தியாவின் ஆர்ஓ இன்ஸ்டிட்யூட் தலைவர் சமந்த் கோயல் ஆகியோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த இரகசிய சந்திப்பில் சீனாவும் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இங்கு பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை என கூறப்பட்டுள்ளது.
அரசியல் தலைவர்கள்
இவ்வாறான கூட்டங்கள் பல ஆண்டுகளாக பாதுகாப்பு உச்சிமாநாட்டுக்கு இடையே இரகசிய இடத்தில் மிகவும் பாதுகாப்பாக நடத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த இரகசிய சந்திப்புகள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதில்லை எனவும் அரசியல் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், இந்த சந்திப்பின் முக்கியத்துவம் கருதி அவர்கள் தங்களது அடையாளங்களை வெளிப்படுத்தவில்லை எனவும் கூறப்படுகிறது.
சகாக்களை சந்திக்கும் வாய்ப்பு
International shadow agenda என்று சொல்லப்படக்கூடிய சர்வதேச நிகழ்ச்சி நிரலில் இந்த சந்திப்பு ஒரு முக்கியமான அங்கமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளின் அடிப்படையில், இந்த சந்திப்பானது முக்கிய நோக்கங்களை கொண்டதாக இருக்கலாம் எனவும், நாடுகளிடையே ஆழமான புரிதலை ஊக்குவிக்கும் ஒரு வழியாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஷங்ரி-லா உரையாடலில் கலந்து கொண்ட சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து கூறுகையில்,
“உளவுத்துறை நிறுவனங்களின் மூத்த அதிகாரிகள் உட்பட பங்கேற்பாளர்கள் தங்கள் சகாக்களை சந்திக்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்த இருதரப்பு அல்லது பலதரப்பு சந்திப்புகளில் சிலவற்றை சிங்கப்பூர் பாதுகாப்பு அமைச்சகம் எளிதாக்கலாம் எனவும், மாநாட்டுக்கு இடையேயான இந்த சந்திப்புகளை பிரதிநிகள் பயன்படுத்திக் கொள்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
