காலாவதியான, தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை - பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம்!
இலங்கையில் உள்ள சந்தைகளில் காலாவதியான மற்றும் தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக இலங்கை பொது சுகாதாரப் பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
உணவுப்பொருட்களை கொள்வனவு செய்யும் பொழுது மிகுந்த கவனத்துடன் இருக்குமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
பரிசோதனை
இதேவேளை, வருகின்ற புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை, உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் உள்ள உணவுகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கைகளுக்காக நாடு முழுவதும் மூவாயிரத்து 200 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
விசேடமாக பண்டிகை காலத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுகள் மற்றும் அவற்றுக்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் தொடர்பில் ஆராயப்படுவதாக சொல்லப்பட்டுள்ளது.
முறைக்கேடான சம்பவங்கள் இடம்பெற்றால், அவை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்படும்.
அதேசமயம், உணவுப்பொருட்கள் விற்பனை தொடர்பில் ஏதேனும் முறைக்கேடுகள் இடம்பெற்றால் 011 263 5675 எனும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தொலைபேசி இலக்கத்துக்கு பொதுமக்கள் அழைப்பை ஏற்படுத்தி அறிவிக்க முடியும் என அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
