புத்தகப்பையுடன் விளையாட்டு பொம்மை: அதிர்ச்சியில் உறைய வைக்கும் பின்னிப் பிணைந்த எலும்புக்கூடுகள்
செம்மணியில் அகழப்பட்ட எலும்பு சிதிலங்களில் இன்றைய நாளும், ஐந்து ஒன்றுடன் ஒன்று பிணைந்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக செம்மணி மனித புதைகுழி வழக்கில் பாதிக்கப்பட்டோர் சார்ப்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி ரணிதா ஞானராஜா தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை ஊடகங்களுக்கு இன்று (01) கருத்து தெரிவிக்கும் போதே அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “அண்மையில் பாடசாலை புத்தகப்பையுடன் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புகள் முழுமையாக அகழந்து எடுக்கப்பட்டுள்ளது.
அந்த புத்தகப்பையுடன் ஒரு குழந்தைகள் விளையாடும் பொம்மை மற்றும் செறுப்பு ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு இதுவரை கண்டு எடுக்கப்பட்ட 33 எலும்புக்கூடுகளுடன் இன்று கண்டெடுக்கப்பட்டவை மேலதிகமானவை என்பதுடன் ஐந்து தொகுதிகளாக இவை கண்டெடுக்கப்பட்டுள்ள நிலையில், எத்தனை என முடிவாக கணிக்கமுடியாமல் உள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |













