பாகிஸ்தானில் இலங்கையர் கொடூர கொலை - முதல் குற்றவாளிக்கு சிறைத்தண்டனை அறிவிப்பு
murder
court
pakistan
srilankan
verdict
By Sumithiran
இலங்கையரான பிரியந்த குமாரவை கொலை செய்யும் காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றிய நபருக்கு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பாகிஸ்தான் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றில் சந்தேகநபர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையிலேயே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அத்துடன், சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக, 10000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தானை தளமாகக் கொண்டு இயங்கும் THE NATION இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அன்டான் என்ற குற்றவாளிக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட மேலும் 34 பேரை, தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்