பாலியல் குற்றச்சாட்டு – காவல் நிலைய பொறுப்பதிகாரி ஒருவர் கைது
Srilanka
Arrested
Police officer
Sex charge
By MKkamshan
மாத்தறையில் பாலியல் குற்றச்சாட்டின் பேரில் காவல் நிலையம் ஒன்றின் பொறுப்பதிகாரி ஒருவர் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
காவல் நிலையத்திற்குள் பொறுப்பதிகாரி, புதிதாக காவல்துறை சேவையில் இணைந்துக்கொண்ட பெண் காவல்துறை உத்தியோகஸ்தரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படுகிறது.
மாத்தறை மாவட்டம் கந்தர காவல் நிலைய பொறுப்பதிகாரி சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக மாத்தறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மாத்தறை சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஷாந்த டி சொய்சாவின் ஆலோசனைக்கு அமைய சம்பவம் குறித்து விசேட காவல்துறை குழு நடத்திய விசாரணைகளை அடுத்தே பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி