பாலியல் வீடியோ விவகாரம் - அனைவருக்கும் பொலிஸார் வெளியிட்ட எச்சரிக்கை
sri lanka
people
balangoda
By Shalini
பலாங்கொடை பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோவை பதிவேற்றிய இணையதளங்கள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து அவற்றை நீக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
குறித்த வீடியோ தொடர்பாக கணினி குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.
இதுபோன்ற வீடியோக்களை வைத்திருப்பதும் மற்றும் ஏனையவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்வதும் இலங்கை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் கூறினார்.
இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவோ கைது செய்ய சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.