பிள்ளையானை தோற்கடித்தே அநுர அரசில் வெற்றிக் கொடி நாட்டினோம்! சாணக்கியன் அதிரடி

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Pillayan Shanakiyan Rasamanickam National People's Power - NPP
By Sathangani Jan 24, 2025 10:52 AM GMT
Report

கடந்த காலத்தில் அரசியல் செய்த பிள்ளையான் (Pillayan) போன்றவர்களை தோற்கடித்து தான் இன்று நாடாளுமன்றத்திற்கு வந்துள்ளோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் (R. Shanakiyan) தெரிவித்துள்ளார்.

நேற்று (23) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அரசாங்கத்தின் குறைபாடுகள் எங்களுக்கு புரிகின்றது. அரசாங்கம் புதியது அவர்களுக்குரிய வேலைகளைச் செய்வதற்கு காலம் வழங்க வேண்டும் என்பதை அறிவோம்.

இணைக்கப்பட்டது யாழ்ப்பாணம்: சரணடைந்த இந்தியா - நன்றி தெரிவிக்கும் தமிழரசுக் கட்சி

இணைக்கப்பட்டது யாழ்ப்பாணம்: சரணடைந்த இந்தியா - நன்றி தெரிவிக்கும் தமிழரசுக் கட்சி

சுவர்களில் சித்திரம் வரையும் வேலைத்திட்டம்

அத்துடன் விமர்சனங்களையோ குறைபாடுகளையோ எதிர்வரும் காலங்களில் நாங்கள் முன்வைக்க விரும்பவில்லை. எனினும் ஒரு சில விடயங்கள் குறித்து நாங்கள் மௌனமாக இருக்க முடியாது.

இலங்கையின் 22 தேர்தல் மாவட்டங்களில் 21 மாவட்டங்களில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றிருப்பினும் மட்டக்களப்பில் எமது கட்சியே வெற்றி பெற்றது.

பிள்ளையானை தோற்கடித்தே அநுர அரசில் வெற்றிக் கொடி நாட்டினோம்! சாணக்கியன் அதிரடி | Shanakiyan Defeated Pillayan And Won Anura Govt

மக்களின் வாக்குகளின் ஊடாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினருடன் இணைந்து பணியாற்றுவது பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கடமை. 

பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ள தேவையற்ற அலங்காரங்களை அகற்றுவது என்பது சிறந்த விடயம். இதே போன்றதொரு சுவர்களில் சித்திரம் வரையும் வேலைத்திட்டமொன்று கோட்டாபய அரசாங்க காலப்பகுதியிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதை மேற்கொண்டிருந்தவர்களே கோட்டாபய (Gotabaya Rajapaksa) அரசாங்கத்திற்கு எதிராக வீதிக்கு இறங்கினர். எனவே அந்த நிலைமைக்கு நாமும் செல்ல கூடாது.

இரண்டாவது நாளாக தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்

இரண்டாவது நாளாக தொடரும் யாழ் பல்கலை மாணவர்களின் உண்ணாவிரத போராட்டம்

 பயங்கரவாத தடைச் சட்டம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக் கோரி நடத்தப்பட்ட கையெழுத்து வேட்டைக்கு தேசிய மக்கள் சக்தி பிரதிநிதிகள் சகல மாவட்டங்களுக்கும் என்னுடன் வருகை தந்தனர்.

அதன்போது பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலத்தை கொண்டுவர அதன்போது கோரவில்லை. அதனை நீக்க வேண்டும் என்றே கோரப்பட்டது.

பிள்ளையானை தோற்கடித்தே அநுர அரசில் வெற்றிக் கொடி நாட்டினோம்! சாணக்கியன் அதிரடி | Shanakiyan Defeated Pillayan And Won Anura Govt

ஆனால் தற்போது அரசாங்கத்தின் கொள்கை பயங்கரவாத தடை சட்டத்தை நீக்கி புதிய சட்டமூலத்தை கொண்டுவருவதே ஆகும்.

நாட்டில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என அரசாங்கத்தின் நீதித்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஜேவிபியினரை உள்ளடக்கிய தேசிய மக்கள் சக்தி கட்சியினர் அரசியல் கைதிகள் குறித்து இதைவிட அதிகமாக அறிந்திருக்க வேண்டும்.

அதேபோன்று மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மதுபானசாலை அனுமதிபத்திரம் தொடர்பிலும் தகவல்களை வெளியிடுமாறு கோரிக்கை விடுக்கிறேன்.” என தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஆர்வம் காட்டாத தமிழரசு கட்சி!

புதிய அரசியலமைப்பு விடயத்தில் ஆர்வம் காட்டாத தமிழரசு கட்சி!



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கனடா, Canada

19 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, மண்கும்பான், கனடா, Canada

21 Apr, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, Markham, Canada

16 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், வவுனியா, பிரான்ஸ், France

21 Apr, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, Versailles, France

24 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம்

21 Apr, 2025
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, அல்லைப்பிட்டி

21 Apr, 2013
2ஆம் ஆண்டு நினைவஞ்சலி. 15ஆம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
மரண அறிவித்தல்

அநுராதபுரம், விசுவமடு

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, வண்ணார்பண்ணை

16 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Toronto, Canada

03 May, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

20 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்