சிராந்தியின் 5 மணிநேர வாக்கு மூலம்! NGO நிதியில் வீடு வாங்கிய சுருக்கில் மகிந்த...!
ஊரா வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே எனச் சொல்வார்கள்.
அதுபோல ஊரார் வீட்டு நெய்யாக இல்லாமல், இப்போது ஊரார் வீட்டுப் பணத்தில் தனது ஆத்துக்காரர் மகிந்த கொழும்பில் வாங்கிய வீடு ஒன்றால் அவரது மனைவி சிராந்தி மாட்டுப்பட்டதால், இன்று சிராந்தி தோன்றிய சிறிலங்காவின் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவு முன்றல் அதகளப்பட்டது.
இருப்பினும், ஏறக்குறைய ஐந்து மணி நேர வாக்குமூல வறுத்தெடுப்புக்குப் பின்னர் கைதாகாமல் சிராந்தி வெளியேறியதால் ராஜபக்ச ஆதரவாளர்கள் சற்று ஆறுதல்பட்டனர்.
ஏனெனில், கடந்த வருடத்தில் ரணிலுக்கு நடந்தது போல விசாரணைக்கு அழைக்கப்பட்ட பின்னர் சிராந்தி கைது செய்யப்பட்டால், நாளை சுதந்திர தின விடுமுறை என்பதால் அவர் உள்ளே இருப்பாரே என்ற பதற்றங்கள் இருந்ததால், சிராந்திக்கு ஆதரவான அதகளங்கள் இருக்கத்தான் செய்தன.
இருப்பினும், வாக்குமூலப் பதிவுடன் சிராந்தி வெளியே வந்து விட்டார்.
ஆனால், தான் இன்று வழங்கிய இந்த வாக்குமூலம் தனது கணவர் மகிந்தவைக் கட்டம் கட்ட வைக்கக்கூடும் என்பதும் அவர் அறியாத சாத்தியப்பாடான ஒரு விடயம்தான்.
சிராந்தியை இலக்கு வைக்கும் இந்தச் சிரிலிய நிதி மோசடி என்ற அடையாளமானது, அவரது கணவனான மகிந்த அரசதலைவராக இருந்தபோது நாட்டின் முதற்பெண்மணி என்ற வகையில் அவரால் உருவாக்கப்பட்ட சிரிலிய சவிய என்ற அறக்கட்டளை சார்ந்த நிதிமுறைகேட்டு விடயம்.
இலங்கைப் பெண்களைத் தொழில்முனைவோராக மாற்றக் கடன்களை வழங்கவென உருவாக்கப்பட்ட இந்த நிதிக் கணக்கில் கைவைக்கப்பட்டு, 2013 இல் 39 மில்லியனில் கொழும்பில் ஒரு வீடு வாங்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்றது.
இருப்பினும், மகிந்தவோ இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறார், குறித்த வீடு தமது குடும்ப உறுப்பினர் ஒருவரிடமிருந்து பெற்ற கடனில் வாங்கப்பட்டது என்கிறார்.
இப்போது இந்த விடயத்தில் இன்று சிராந்தி ஐந்து மணி நேரம் வறுத்தெடுக்கப்பட்டு வெளியே விடப்பட்ட நிலையில், அவர் வெளியே விடப்பட்ட நகர்வுக்கு முன்னால் உள்ள நிலவரத்துடன் பல விடயங்களைத் தாங்கி வருகின்றது ஐபிசி தமிழின் இன்றைய செய்திவீச்சு….
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர் தேசத்தை உலுக்கும் வீதி விபத்துக்கள்... 2 நாட்கள் முன்