கருணாவால் கொழும்புக்குக் கொண்டுசெல்லப்பட்ட பெண் தளபதிகள் கூறிய அதிர்ச்சித் தகவல்கள்
விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு பிராந்திய தளபதி கருணா அந்த அமைப்பிலிருந்து விலகுவதாக தெரிவித்து பிரிந்து சென்றமை திடீரென ஒரு பூகம்பத்தையே உருவாக்கியது.இந்த சம்பவம் இலங்கை, இந்தியாவில் மாத்திரமல்ல தமிழர்கள் வாழும் உலகின் அத்தனை இடங்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
சுமார் 40 நாட்கள் கருணா குழுவின் கீழ் இருந்த மட்டக்களப்பு அல்லோலகல்லோலப்பட்டது.
இந்த பின்னணியில் கருணாவுடன் கொழும்புக்கு தப்பிச்சென்று அவருடன் இரண்ட மாதங்கள் வரை தங்கியிருந்து விட்டு பின்னர் மட்டக்களப்பிற்கு வந்து புலிகள் அமைப்பில் தம்மை இணைத்துக்கொண்ட நான்கு ணெ் தளபதிகளும் உண்மையிலேயே என்ன நடந்தது, என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்ற உண்மையை அன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர்கள் உலகிற்கு வெளிப்படுத்தியிருந்தார்கள்
அவர்கள் தெரிவித்த அந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் என்ன? கருணாவிற்கு பின்னால் இருந்தது யார் என்பது போன்ற அவர்கள் அன்று தெரிவித்த விடயங்களை மிகவும் பட்டவர்த்தனமாக வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது இந்த உண்மைகள் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |