சட்டத்தரணியின் மனைவியை கொன்ற துப்பாக்கிதாரி தொடர்பில் வெளியான அதிர்ச்சித் தகவல்!
தலங்கம - அக்குரேகொடவில் சட்டத்தரணி புத்திக மல்லவராச்சி மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய இரண்டாவது துப்பாக்கிச் சூடு நடத்தியவர், நாட்டை விட்டு வெளியேற முன்கூட்டியே வேறொருவரின் பெயரில் வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரித்து வைத்திருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இவ்வாறு தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு கடவுச்சீட்டு குறித்த தகவல்கள் புலனாய்வுக் குழுக்களுக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தொடர்பாக பொதுமக்களின் உதவியை நாடி காவல்துறை வெளியிட்ட AI புகைப்படம் போலி வெளிநாட்டு கடவுச்சீட்டை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட புகைப்படம் என்றும் காவல்துறை தகவல் வெளிப்படுத்தியுள்ளது.
உண்மையான அடையாளம்
பாதாள உலகில் வாடகைக்கு அமர்த்தப்பட்ட கொலையாளியான துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் உண்மையான அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றும், அவர் தற்போது நாட்டில் இருக்கிறாரா அல்லது நாட்டை விட்டு தப்பிச் சென்றுவிட்டாரா என்பது சந்தேகமே என்றும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர் வேறு பல கொலைகளில் தொடர்புடையவர் என்றும், அவரைப் பிடிப்பது பல மர்மங்களை அவிழ்க்க உதவும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
குறித்த துப்பாக்கிதாரியே சட்டத்தரணியின் மனைவி மீது ரிவால்வரைப் பயன்படுத்தி சுட்டவர் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசாரணை
இந்த இரட்டைக் கொலையில் முக்கிய துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும், T-56 ஆயுதத்தால் சட்டத்தரிணை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் 90 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும், பதாள உலக குற்றவாளியான கரந்தெனிய சுத்தா இந்தக் கொலையைத் திட்டமிட்டார் என்பதும், கொலையை டுட்டு என்பவர்கள் இயக்கினார் என்பதும் தெளிவாகத் தெரியவந்துள்ளதாக விசாரணைக் குழுக்கள் தெரிவிக்கின்றன.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |