நாத்தாண்டிய துப்பாக்கிச்சூடு தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்
நாத்தாண்டிய, விக்கிரமசிங்க மாவத்தையில் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் சந்தேக நபர், டுபாயில் உள்ள ஒரு பெரிய போதைப்பொருள் கடத்தல்காரரால் வழங்கப்பட்ட ஒப்பந்தத்தின் பேரில் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் உள்ள கடத்தல்காரருக்கும் இறந்த பெண்ணுக்கும் இடையே ஏற்பட்ட தொலைபேசி வாக்குவாதமே இந்த கொலைக்கான முக்கிய காரணம் என்று பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மாரவில, இடமல்கொடவில் வசிக்கும் மூன்று குழந்தைகளின் தாயான எதிரிசிங்க ஆராச்சிலாகே வசந்தி சதுராணி (30) அல்லது ‘சுட்டி’, 22 ஆம் திகதி நள்ளிரவில் கொலை செய்யப்பட்டார்.
படுகாயமடைந்த மகன்
4,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு போதைப்பொருள் பொதிகளை கொண்டு வருமாறு கேட்டு தொலைபேசி அழைப்பு வந்ததை அடுத்து, தனது பத்து வயது மகன் மற்றும் இரண்டு பேருடன் முச்சக்கர வண்டியில் வந்தபோது, பாதாள உலகக் கும்பல் துப்பாக்கிதாரிகளால் அவர் தாக்கப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த அவரது பத்து வயது மகன் இன்னும் மாரவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த கொலை செய்யப்பட்ட பெண் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ள்ளது.
