காவல்துறையின் உத்தரவை மீறிச் சென்ற வாகனம் மீது துப்பாக்கிசூடு : தமிழர் பகுதியில் அதிகாலை சம்பவம்
மன்னார்(mannar) அடம்பன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பள்ளமடு பகுதியில் சட்ட விரோதமாக மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் வாகனத்தை கடமையில் ஈடுபட்ட அடம்பன் காவல்துறையினர் இடை மறித்த போது காவல்துறையினரின் சமிக்ஞை கட்டமைப்பை மீறி செல்ல முற்பட்ட டிப்பர் வாகனத்தை நோக்கி காவல்துறையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டனர்.
குறித்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை வேளை இடம்பெற்றுள்ளது.குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து குறித்த டிப்பர் வாகனம் நிறுத்தப்பட்டது.
சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண்
இதன் போது குறித்த டிப்பர் வாகனத்தில் சட்ட விரோதமான முறையில் ஏற்றிச் செல்லப்பட்ட மண் மற்றும் உபகரணங்கள் காணப்பட்டதோடு அவை மீட்கப்பட்டதாக அடம்பன் காவல்துறையினர் தெரிவித்தனர்.
மேலும் டிப்பர் வாகனத்தின் சாரதி மற்றும் உதவியாளர் அடம்பன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட இரு நபர்கள்
கைது செய்யப்பட்ட இரு நபர்கள் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சன்னார் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் எனவும்,அவர்கள் அடம்பன் காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்தோடு,மீட்கப்பட்ட பொருட்களும் அடம்பன் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலதிக விசாரணைகளை அடம்பன் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை அடம்பன் காவல்துறை பிரிவுக்குட்பட்ட பகுதியில் அரச மற்றும் தனியார் காணிகளில் தொடர்ச்சியாக சட்டவிரோத மணல் அகழ்வு இடம் பெற்று வருகின்ற போதும் அடம்பன் காவல்துறையினர் மௌனம் காத்து வருவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
