மன்னார் துப்பாக்கிச்சூட்டு விவகாரம் : சந்தேக நபர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
மன்னார் நீதிமன்றத்திற்கு முன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார் நீதிமன்றில் இது குறித்த விசாரணைகள் இன்று (29) இடம்பெற்ற போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்றைய தினம் (29) கைது செய்யப்பட்ட மேலும் ஒரு சந்தேக நபரை நாளை (30) வரை காவல்துறை தடுப்புக் காவலில் தடுத்து வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
அடையாள ஆள் அணிவகுப்பு
இதேவேளை இன்று மன்னார் நீதிமன்றத்தின் மூடிய அறைக்குள் தனித்தனியாக அடையாள ஆள் அணிவகுப்பு இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மன்னார் நீதிமன்றத்தில் கடந்த 16ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றிற்காக வருகை தந்தவர்களை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு, பெண் ஒருவர் உள்ளடங்கலாக இருவர் படுகாயமடைந்தனர்.
நீதிமன்றின் உத்தரவு
இந்த நிலையில் மன்னார் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் பணிப்புரைக்கு அமைவாக விசேட காவல்துறை குழுக்கள் நியமிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வந்த தேடுதல் நடவடிக்கையின் போது பிரதான சந்தேக நபர்கள் உள்ளடங்கலாக 5 பேரை மன்னார் காவல்துறையினர் கைது செய்தனர். அவர்களில் இராணுவத்துடன் தொடர்புடைய மூன்று பேர் உள்ளடங்குகின்றனர்.

குறித்த 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் இன்று (29) மீண்டும் மன்னார் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட போது விசாரணைகளை மேற்கொண்ட நீதவான் குறித்த 5 சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
போர்க்குற்றவாளி இல்லையெனில் ஏன் சர்வதேச விசாரணைக்கு அஞ்ச வேண்டும்... 10 மணி நேரம் முன்