யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு

Indian fishermen Jaffna Sri Lanka Navy Ramalingam Chandrasekar
By Sathangani Jan 29, 2025 08:03 AM GMT
Report

இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்து மீறி உள் நுழைவதே அனர்த்தங்களுக்கு வழி வகுப்பதாக யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் கடற்றொழில் நீர்வளத்துறை அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்தார்.

வடமராட்சிக் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கருத்துத் தொரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ”இலங்கை இறைமையுள்ள நாடு, அதன் கடல் எல்லைகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து வருகின்றனர்.

யாழ். நகரில் மீட்கப்பட்ட காணாமல் போன பிரான்ஸ் பிரஜை

யாழ். நகரில் மீட்கப்பட்ட காணாமல் போன பிரான்ஸ் பிரஜை

கடற்றொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு

இந்த நிலையில் நேற்று (28) காங்கேசன்துறைக் கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி வருகை தந்து மீன்பிடியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்களை கைது செய்வதற்காக கடற்படையினர் சுற்றிவளைத்து அவர்களின் படகுகுக்குள் ஏறியுள்ளனர்.

இவ்வாறு ஏறிய கடற்படையினரை படகுடன் இழுத்துச் செல்வதற்கு இந்திய கடற்றொழிலாளர்கள் தயாரானபோது அதனை தடுத்து நிறுத்துவதற்காக துப்பாக்கிப் பிரயோகம் செய்தனர்.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Sl Navy Fires On Indian Fishermen Min Chandrasekar

இந்திய அத்துமீறிய மீன்பிடி விவகாரம். இன்று நேற்று உருவான விடயம் அல்ல. பல வருடங்களாக நீடித்து வரும் பிரச்சினை. இந்த பிரச்சினைக்கு எமது ஆட்சியில் தீர்வைக் காண்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனெனில் மக்களை தொடர்ச்சியாக கண்ணீர் விட வைக்க முடியாது. அத்துமீறி இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடியில் ஈடுபடாதீர்கள். எமது மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்காதீர்கள் என்று நாங்கள் பலமுறை இந்திய கடற்றொழிலாளர்களை தயவாகக் கேட்டுள்ளோம்.

அண்மையில் கூட நெடுந்தீவு மற்றும் வடமராட்சிப் பகுதிகளில் இந்திய இழுவைப் படகுகள் அத்து மீறி உள் நுழைந்து அப்பகுதி கடற்றொழிலாளர்களின் வலைகளை நாசப்படுத்தியதுடன் அவர்களை பொருளாதார ரீதியாக நலிவுற்றவர்களாக ஆக்குகின்றனர்.

அரசியல் இருந்து ஒதுங்க தயார் : கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு

அரசியல் இருந்து ஒதுங்க தயார் : கஜேந்திரகுமார் அதிரடி அறிவிப்பு

இலங்கை கடற்படை

நான் அந்த பகுதிக்கு விஜயம் சென்றபோது மக்கள் கண்ணீர் மல்க இந்திய இழுவைப் படகுகளை நிறுத்துங்கள் எங்களால் வாழ முடியாதுள்ளது என கூறுகிறார்கள்.

யாழில் இந்திய கடற்றொழிலாளர்கள் மீதான துப்பாக்கிச்சூடு : அமைச்சரின் அதிரடி அறிவிப்பு | Sl Navy Fires On Indian Fishermen Min Chandrasekar

எமது மக்களை இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர்கள் துன்பப்படுத்தும் செயற்பாடுகளை எக்காரணத்தினாலும் அனுமதிக்க முடியாது. எமது இலங்கை கடற்படை தமது கடல் எல்லையை பாதுகாப்பதற்காக கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் அத்துமீறும் இந்திய மீன்பிடிப் படகுகளை கைது செய்வது வழமையான செயற்பாடு.

கைது நடவடிக்கைகளில் ஒத்துழைக்காத படகுகளை துரத்தும் போது சில அசம்பாவிதங்கள் கடலில் ஏற்படுகின்றன. இவை கடந்த காலங்களிலும் இடம்பெற்றுள்ளன.

ஆகவே இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கை கடல் எல்லையை தாண்டாது மீன்பிடியில் ஈடுபடுவது தேவையற்ற அனர்த்தங்களை தவிக்கும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ளோருக்கு வெளியான அறிவிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்.பாஷையூர், Jaffna, பிரான்ஸ், France

10 Sep, 2010
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கிளாலி

11 Sep, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016