மினுவாங்கொடையில் பாடசாலைக்கு அருகில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி
Sri Lanka Police
Gampaha
Sri Lanka Police Investigation
By Sathangani
கம்பஹா - மினுவாங்கொடையில் (Minuwangoda) அமைந்துள்ள பாடசாலை ஒன்றுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இன்று (07) இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தில் 35 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறையினர் விசாரணை
மோட்டார் சைக்களில் வந்த இருவர் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்