இன்று நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலைகளில் மாற்றம்!
Sri Lanka
Sri Lankan Peoples
Price
By Sathangani
இலங்கையில் இன்று (29) நள்ளிரவு முதல் சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ரொட்டி, பரோட்டா மற்றும் சிற்றுண்டி வகைகள் உள்ளிட்ட கோதுமை மா சார்ந்த உணவுப் பொருட்களின் விலைகள் இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளன.
புதிய விலைகள்
இன்று (29) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கோதுமை மாவின் விலை 17 ரூபாயினால் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படுவதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று நள்ளிரவு முதல் குறித்த உணவுப் பொருட்களின் புதிய விலைகள் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்