நாடாளுமன்றில் விவசாயிகளுக்காக குரல் கொடுத்த சிறீதரன் எம்.பி

S Shritharan Sri Lanka Money K.D. Lalkantha
By Sathangani Feb 06, 2025 09:41 AM GMT
Report

நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Shritharan) கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்றைய (06.02.2025) நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே இதனைக் குறிப்பிட்ட அவர் விவசாய அமைச்சர் கே.டீ. லால்காந்தவிடம் (K. D. Lalkantha) சில கேள்விகளையும் முன்வைத்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “இலங்கை மக்களின் பிரதான தொழில் விவசாயம். அதிலும் நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகளும் இதனையே பிரதானமாக கொண்ட மாவட்டங்களும் உண்டு.

2024 - 2025 காலப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்களில் நெல் உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது.

தங்களிடமிருந்த கையிருப்புக்களை வைத்து வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பருவ கால நெற்செய்கையில் ஈடுபட்ட விவசாயிகள் இந்த பாதிப்பினால் கையறு நிலைக்கு வந்துள்ளனர்.

பலர் அடுத்த சிறுபோக நெற்செய்கை பற்றி சிந்திக்க முடியாமல் நட்டமடைந்துள்ள நிலையில் தம்மை தூக்கி விடுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

1.நாடு பூராகவும் வெள்ளத்தால் அழிவடைந்த நெல் விவசாய நிலங்களின் அளவு எவ்வளவு?

2.எத்தனை விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்?

3. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு, காப்புறுதி அல்லது நிவாரணம் வழங்கும் திட்டம் ஏதாவது அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளதா?

4. வடக்கு கிழக்கில் எத்தனை ஏக்கர் நெல் விவசாய நிலங்கள் பாதிப்படைந்துள்ளன? அதற்கான நிவாரணத் திட்டம் யாது?

என்ற கேள்விகளை சபையில் முன்வைத்ததுடன், நெல்லுக்கான உத்தரவாத நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் வடக்கு கிழக்கில் ஜனவரி மாதமே அறுவடை ஆரம்பமாகியுள்ளது என சுட்டிக்காட்டினார்.

நெல்லுக்கான நட்டஈட்டை வழங்குபவர்கள் தங்களுடைய சுற்றுநிருபத்திற்கு அமைய செயற்படுவதாகவும் விண்ணப்பங்கள் வழங்கும் நடவடிக்கையை கிளிநொச்சியில் நிறுத்தியிருக்கின்றார்கள் என குறிப்பிட்டார்.

விண்ணப்ப படிவங்களையாவது உடனடியாக வழங்கி விவசாயிகளின் நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.


மீளப் பெறப்பட்ட டயானா கமகேவின் பிடியாணை

மீளப் பெறப்பட்ட டயானா கமகேவின் பிடியாணை

நாடாளுமன்றில் பாரிய அமளி துமளி : சஜித்தை மன்னிப்பு கேட்குமாறு கூச்சலிட்ட ஆளுங்கட்சி

நாடாளுமன்றில் பாரிய அமளி துமளி : சஜித்தை மன்னிப்பு கேட்குமாறு கூச்சலிட்ட ஆளுங்கட்சி

காட்டிக் கொடுத்த வைத்தியர் சத்தியமூர்த்தி : சபையில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

காட்டிக் கொடுத்த வைத்தியர் சத்தியமூர்த்தி : சபையில் அம்பலப்படுத்திய அர்ச்சுனா எம்.பி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026