பின்னணி பாடகி கல்பனா தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சி
பிரபல பின்னணி பாடகி கல்பனா ராகவேந்தர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்க்க முயற்சித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் (04) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், தெலுங்கானாவின் (Telangana) ஐதரபாத் (Hyderabad) மாவட்டம் நிசாம்பத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கல்பனா வசித்து வந்துள்ளார்.
காவல்துறையினருக்கு தகவல்
அவரது வீடு கடந்த இரண்டு நாட்களாக திறக்கப்படாமல் இருந்ததை கண்டு குடியிருப்பில் வசித்தவர்கள் சந்தேகமடைந்துள்ளனர்.
இதையடுத்து, இது தொடர்பில் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்வையிட்டுள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதி
அங்கு கல்பனா மயங்கிய நிலையில் இருந்ததையடுத்து, அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கல்பனாவுக்கு செயற்கை சுவாச கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
