ஐ.நாவிற்கு கடிதம் அனுப்புவதில் காலதாமதப்படுத்திய சுமந்திரன்- சர்ச்சை தொடர்பில் பல தகவல்களை அம்பலப்படுத்திய சித்தார்த்தன்!

jaffna letter press meet sitharthan united natiom
By Kalaimathy Sep 16, 2021 12:34 PM GMT
Report

விடுதலைப்புலிகளுடன் மோதினீர்கள், அவர்களை காட்டிக் கொடுத்தீர்கள், அவர்கள் மீதான விசாரணையை கோருவதில் என்ன பிரச்சனையென இப்பொழுது சிலர் கேட்கிறார்கள். அது வேறு விடயம்.

ஆனால் சர்வதேச ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டோமென புளொட்டின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சித்தார்த்தன் தெரிவித்தார்.

கந்தரோடையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று காலை நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்பியமை தொடர்பான சர்ச்சைக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக்கு கடிதம் அனுப்புவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியும் இணைய வழியாக 5 கூட்டங்களை நடத்தி, ஒன்றாக கடிதம் அனுப்ப தீர்மானித்தோம். அந்த கடிதத்தை தயாரிக்கும்படி சுமந்திரனிடம் கூறப்பட்டது.

ஆனால் அவர் அதை தாமதமாக்கிக் கொண்டிருந்ததால் தான், எமக்கு சந்தேகம் ஏற்பட்டது. வழக்கமாக இப்படி காலதாமதமாக்கி விட்டு, அவர்களே கையெழுத்து வைத்து கடிதம் அனுப்பியுள்ளனர். கடந்த பெப்ரவரியில் இப்படித்தான் எல்லோரும் இருந்து கலந்துரையாடிவிட்டு தனியே சம்பந்தன், விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், ஊர் பேர் தெரியாத சில அமைப்புக்கள் இணைந்து கடிதம் அனுப்பியிருந்தார்கள்.

இம்முறையும், அப்படியான நிலைமை ஏற்படுமென்ற ஐயம் இருந்தது. அதன் பின்னரே நாங்கள் கடிதம் அனுப்ப வேண்டிய நிலைமையேற்பட்டது. இலங்கை தமிழ் அரசு கட்சியின் ஆவணத்தில் புலிகளின் போர்க்குற்ற விசாரணை குறிப்பிடப்பட்டிருந்தது. மற்ற இரண்டு கட்சிகளும் அதற்கு இணங்க மாட்டார்கள்.

நாம் மட்டுமல்ல, இலங்கை தமிழ் அரசு கட்சி எம்.பிக்களில் சுமந்திரனும், இன்னும் ஒருவரையும் தவிர வேறு யாரும் கையெழுத்திட மறுத்துவிட்டார்கள். அதனால் தான் சம்பந்தன் மட்டுமே கையெழுத்திட்டு அனுப்பினார். தமிழ் அரசு கட்சியின் கடிதம் எல்லோருடைய கையெழுத்துடன் ஒரு இடமும் அனுப்பப்படாது என்பது தெரிந்த பின்னரே எமது கடிதம் அனுப்பப்பட்டது.

புலிகளுடன் மோதினீர்கள், அவர்களை காட்டிக் கொடுத்தீர்கள், அவர்கள் மீதான விசாரணையை கோருவதில் என்ன பிரச்சனையென இப்பொழுது சிலர் கேட்கிறார்கள். அது வேறு விடயம். ஆனால் சர்வதேச ரீதியாகவோ, கொள்கை ரீதியாகவோ எந்த சந்தர்ப்பத்திலும் நாங்கள் ஒருவரையொருவர் காட்டிக்கொடுக்க மாட்டோம். நாம் இதில் மிக தெளிவாக இருக்கிறோம்.

விடுதலைப்புலிகளை விசாரியுங்கள் என்றாலே, அவர்கள் போராடியது பிழையென்பது தான் இவர்களின் நிலைப்பாடு. இது இயக்கங்களின் போராட்டமல்ல. ஒரு சிலரை தவிர, மிகுதி ஒட்டுமொத்த தமிழர்களும் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தனர். அது மக்களின் போராட்டம். அதிலே சிறு சிறு தவறுகள் நடந்திருக்கலாம். நாம் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதாக எப்பொழுதும் சொன்னதில்லை.

தமிழ் மக்களின் பலத்தை உடைக்கும் நிலைப்பாட்டை நாம் எடுக்க மாட்டோம். இப்படியான பல பிரச்சனைகள் வந்து போகும். தனது தலைமைக்குள் இப்படியான பிரச்சனைகள் வராமல் பாதுகாப்பது சம்பந்தனது கடமை. அவர் அதை சரியாக செய்தால் இப்படியான பிரச்சினைகள் வராது. ஆனால் அவர் சரியாகவே செய்தார்.

அவர் உடனடியாகவே அறிக்கை விட்டார். இந்த கடிதம் எழுதியதால் கூட்டமைப்பு உடையாதென. ஆனால் அவருக்கு கீழேயுள்ளவர்கள் தான் பிரச்சனையை உண்டாக்கினர். தமிழ் அரசு கட்சியில் சிறீதரன் தலைமையில் 9 பேர் கடிதம் எழுதினார்கள். அந்த தகவல் வந்ததும், சுமந்திரன் ஒரு தொலைபேசி அழைப்பு எடுத்தார்.

அந்த அழைப்புடன் பல பேர், நாங்கள் கையெழுத்து வைக்கவில்லை என்றார்கள். பிறகு அந்த கடிதம் இணையத்தளத்தில் வெளியானது. இதன்பின் ஊடக சந்திப்பை நடத்தி, நாம் கையெழுத்திட்டது உண்மை, ஆனால் அனுப்பவில்லையென சிறீதரன் எம்.பி தெரிவித்தார்.

ஒரு ஜனநாயக கட்சியில் ஒருவர் தொலைபேசியில் அழைத்ததும் எல்லோரும் இவ்வளவு பயப்படுகிறார்கள் என்றால், அந்த ஒருவர் ஆயுத இயக்கத்தில் இருந்து, தலைவருக்கு வேண்டப்பட்டவராக இருந்து, அவரது கையில் ஒரு துப்பாக்கியும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி