மன்னார் வலைப்பாட்டில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய ஆறு ஆமைகள்
srilanka
death
mannar
turtles
By Sumithiran
மன்னாரில் உள்ள வலைப்பாடு கடற்கரையில் மேலும் 6 ஆமைகள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கி உள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமை கடற்படை அதிகாரிகள் ஆமைகளின் சடலங்களைக் கண்டு வனவிலங்கு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்படி, வனவிலங்கு துறையின் வடக்கு மாகாண கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர் பி. கிரிதரன் உடல் பாகங்களை மேலதிக பரிசோதனைக்காக அரசு ஆய்வாளர் துறைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
வனவிலங்கு திணைக்களத்திற்கு பொறுப்பான வடக்கு மாகாணத்தின் கால்நடை அலுவலகம் மற்றும் மன்னார் வனவிலங்கு துறை அலுவலகம் இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
1ம் ஆண்டு நினைவஞ்சலி