அநுராதபுர சிறைக்குச் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியினரை தடுத்த சிறை அதிகாரிகள்! கொதிப்படைந்த மனோ
அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பார்வையிடுவதற்கு சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதன்படி இன்றைய தினம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், வைத்தியர் காவிந்த ஜயவர்தன மற்றும் ரோகண பண்டார ஆகியோர் சென்றனர்.
எனினும், சிறைச்சாலை வளாகத்திற்குள் செல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுமதி மறுத்துள்ளதாக சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மனோ கணேசன் உடனடியாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனவிற்கு உடனடியாக தொலைபேசியூடாக தொடர்புக் கொண்டு முறைப்பாடு செய்துள்ளனர்.
சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்தே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறைச்சாலைக்குள் சென்று கைதிகளைப் பார்வையிடுவதற்கு அனுமதி மறுககப்படுவது நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமை மீறல் செயற்பாடே.
அத்துடன் சபாநயகரின் அனுமதி பெற்ற பின்னர் தான் சிறைச்சாலைகளுக்கோ அல்லது பொலிஸ்நிலையங்களுக்கோ சென்று கைதிகளை பார்வையிட முடியும் என்ற நிலைவருமானால் நாட்டில் எந்தளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய எங்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மக்களுக்கு என்ன நிலை என்பதை உணருங்கள்.
எங்களுக்கு கதவு திறக்கப்பட்டாமல் இருந்திருந்தால் நாங்கள் இந்த இடத்திலிருந்து சென்றிருக்க மாட்டோம். உண்ணாவிரதம் இருந்தேனும் உள்ளே சென்று கைதிகளை பார்வையிட்டிருப்போம்.
ஏனென்றால் உள்ளே இருப்பது எங்கள் உறவுகள் - எங்கள் உடன் பிறப்புக்கள் - இரத்தத்தின் இரத்தங்கள் அவர்களுக்கு துன்பம் வரும்போது - கஷ்டம் வரும்போது - கண்ணீர்விடும் போது அதனை துடைக்கவேண்டியது எங்களின் பொறுப்பு.
சிறைச்சாலைகள் புனர்வாழ்வு முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொகான் ரத்வத்த மதுபோதையில் துப்பாக்கியை எடுத்து தம்மை அச்சுறுத்தியதை தமிழ் அரசியல் கைதிகள் தன்னிடம் கூறியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.