யாழில் கால்கள் மடித்து அமர்ந்திருக்கும் எலும்புக்கூடு! எடுக்கப்படவுள்ள விசேட நடவடிக்கை
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி அகழாய்வு பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட மனித என்புக்கூடு குறித்து விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.
சித்துப்பாத்தி மனித புதைகுழியில் மனித எலும்பு கூடொன்று கால்கள் மடித்து செங்குத்தாக அமர்ந்திருந்த நிலையில் அடையாளம் காணப்பட்டது.
இந்நிலையில் இவ்வாறு அடையாளம் காணப்பட்ட என்புத் தொகுதி தொடர்பில் யாழ்.பல்கலைக்கழக இந்துக் கற்கைகள் பீட பீடாதிபதியுடன் கலந்துரையாடி, பேராசிரியர் ராஜ்சோமதேவாவின் அபிப்பிராஜங்களை கேட்ட பின் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.
புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு
இதேபோன்ற நிலையில் புதைக்கப்பட்ட மனித எலும்புக்கூடு கடந்த ஆண்டு நடைபெற்ற இரண்டாம் கட்ட அகழாய்விலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை வெளிப்பட்ட மொத்த மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 446 ஆக உயர்ந்துள்ளது. இதில் 434 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி புதைகுழியிலிருந்து இதுவரை வெளிப்பட்ட மொத்த மனித என்புக்கூடுகளின் எண்ணிக்கை 446 ஆக உயர்ந்துள்ளது.
இதில் 434 என்புக்கூடுகள் இதுவரை முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
3 நாட்கள் முன்