வலி நிறைந்த நினைவுகள்... யுத்தகாலத்தில் கருணா குழுவால் ஆயுதமுனையில் கடத்தப்பட்டவர் உயிரிழந்தார் .!

Polonnaruwa Karuna Amman Sri Lanka Final War
By Eunice Ruth Feb 14, 2024 04:49 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

வெள்ளவாய பகுதியில் பாலா ஸ்ரோஸ் உரிமையாளர் பொன்னையா செல்வராசா இன்றைய தினம் இறைவனடி சேர்ந்தார்.

2007 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 6 ஆம் திகதி இரவு 8:30 மணியளவில் ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட இராணுவப்புலனாய்வு மற்றும் கருணா குழுவால் பொன்னையா செல்வராசா , சிவஞானம் செல்வதீபன் ஆகியோர் கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் வெலிகந்தை காட்டுப்பகுதியில் ஆயுத முனையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

யுத்தகாலத்தில் வர்த்தகர்களை குறிவைத்து

யுத்தகாலத்தில் வர்த்தகர்களை குறிவைத்து கருணா குழுவினர் கப்பம் கோரி கடத்தல்களை மேற்கொண்டு வந்தனர்.

வலி நிறைந்த நினைவுகள்... யுத்தகாலத்தில் கருணா குழுவால் ஆயுதமுனையில் கடத்தப்பட்டவர் உயிரிழந்தார் .! | Sl Ltte War Karuna Amman Ponnayya Selvarasa Died

இந்நிலையில் நீண்டகாலமாக வெள்ளவாய பகுதியில் வர்த்தக நிலையங்களை நடாத்தி வந்த பொன்னையா செல்வராசாவை கடத்தி கப்பம் கோரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அங்கு பணிபுரிந்த செல்வதீபனை விசாரணை செய்யவேண்டும் என்ற போர்வையில் உரிமையாளர் செல்வராசாவும் விசாரணைக்கு வரவேண்டும் என்று இருவரையும் வெள்ளைவானில் வலிந்து கடத்தி சென்றனர் .

முதல் கட்டமாக ஐந்து கோடி பணம் கோரப்பட்ட நிலையில் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூற 20 தினங்களுக்கு பின்னர் இரண்டு கோடி பணம் கோரப்பட்டது.

அதற்கும் அவ்வளவு பணம் தன்னிடமில்லை என்று உரிமையாளர் தெரிவிக்க மூன்றாம் கட்டமாக ஒரு கோடி பணம் கோரப்பட்டது.

இதனை செலுத்தவறினால் இருவருக்கும் மரண தண்டணை என்பதை ஆயுததாரிகள் உறுதியாக தெரிவித்து விட்டனர்.

செல்வராசாவின் குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்த ஆயுததாரிகள் தாம் கோரும் பணம் குறித்த நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று கடும் தொனியில் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தாரும் பல போராட்டங்களுக்கு பின் பணம் சேகரித்து அவர்கள் கோரும் பணத்தை வழங்கிய பின்னர் உரிமையாளர் செல்வராசாவை விடுக்க இணக்கம் தெரிவித்தனர்.

செல்வதீபனுக்கு மரண தண்டனை அல்லது தொடர்ந்து தடுத்து வைக்குமாறு மேல் இடத்தில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

செல்வராசாவின் தாழ்மையான கோரிக்கைக்கு பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஏழாம் மாதம் 28 ஆம் திகதி இரவு 12 மணியளவில் நித்திரையில் இருந்த போது நான்கு பேர் கொண்ட ஆயுததாரிகள் வந்து இருவரையும் கண்களை கட்டி அழைத்து சென்றனர்.

இருவரையும் ஒரு ஹயஸ் வாகனத்தில் ஏற்றி பொலனறுவை தொடருந்து நிலையத்தில் வைத்து விடுவித்தனர்.

இது தொடர்பில் அந்தக்காலத்தில் உயிர் தப்பிய செல்வராசா தெரிவித்தவை வருமாறு,

எங்களிடம் இருந்த அடையாள அட்டை பறிக்கப்பட்ட போதும் மீள ஒப்படைக்கவில்லை. இருவருக்கும் தலா ரூபா 1000 மட்டும் வழங்கப்பட்டது.

இங்கு வந்து மீண்டும் உயிருடன் செல்லும் நபர்கள் நீங்கள் தான் என்றும் விரைவாக தப்பிச் செல்லுமாறு கூறி விடுத்தனர்.

பொலனறுவையில் இருந்து அதிகாலை 2 மணிக்கு கொழும்புக்கு செல்லும் தொடருந்தில் ஏறி அச்சத்துடன் இருவரும் கொழும்புக்கு வந்து சேர்ந்தோம்.

பத்து தினங்கள் கொழும்பில் மறைவிடத்தில் இருந்து விட்டு எனக்கு ஆவணம் வந்தவுடன் செல்வராசா கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு செல்ல கிராம சேவையாளர் உறுதிப்படுத்திய ஆவணத்துடன் திருகோணமலைக்கு சென்று அங்கு கப்பல் போக்குவரத்துசேவையில் பணிபுரிந்த சுபச்செல்வன், ஜெயதாஸ் ஆகியோரின் உதவியுடன் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன்.

அடுத்த ஆண்டு 2008 ஆம் ஆண்டு வெள்ளவாயவில் வைத்து சகோதரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இன்று வரை அவர் தொடர்பான தகவல்களின்றி உள்ளன.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பேர்லின், Germany

04 Apr, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், கொழும்பு, India

24 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, யாழ்ப்பாணம், Asnæs, Denmark

26 Mar, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, சென்னை, India, Toronto, Canada

03 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் மேற்கு, Milton, Canada

22 Mar, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, வேலணை புளியங்கூடல், London, United Kingdom

20 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, சூரிச், Switzerland

19 Mar, 2026
நன்றி நவிலல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புளியங்கூடல், Mississauga, Canada

24 Mar, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, முறிகண்டி, Toronto, Canada

17 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France

24 Mar, 2021
மரண அறிவித்தல்

பொலிகண்டி, திருகோணமலை, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி வடக்கு, இணுவில், Glarus, Switzerland

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026