வலி நிறைந்த நினைவுகள்... யுத்தகாலத்தில் கருணா குழுவால் ஆயுதமுனையில் கடத்தப்பட்டவர் உயிரிழந்தார் .!

Polonnaruwa Karuna Amman Sri Lanka Final War
By Eunice Ruth Feb 14, 2024 04:49 PM GMT
Eunice Ruth

Eunice Ruth

in சமூகம்
Report

வெள்ளவாய பகுதியில் பாலா ஸ்ரோஸ் உரிமையாளர் பொன்னையா செல்வராசா இன்றைய தினம் இறைவனடி சேர்ந்தார்.

2007 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 6 ஆம் திகதி இரவு 8:30 மணியளவில் ஆயுதங்களுடன் வந்த 6 பேர் கொண்ட இராணுவப்புலனாய்வு மற்றும் கருணா குழுவால் பொன்னையா செல்வராசா , சிவஞானம் செல்வதீபன் ஆகியோர் கடத்தப்பட்டு மூன்று மாதங்கள் வெலிகந்தை காட்டுப்பகுதியில் ஆயுத முனையில் தடுத்து வைக்கப்பட்டனர்.

யுத்தகாலத்தில் வர்த்தகர்களை குறிவைத்து

யுத்தகாலத்தில் வர்த்தகர்களை குறிவைத்து கருணா குழுவினர் கப்பம் கோரி கடத்தல்களை மேற்கொண்டு வந்தனர்.

வலி நிறைந்த நினைவுகள்... யுத்தகாலத்தில் கருணா குழுவால் ஆயுதமுனையில் கடத்தப்பட்டவர் உயிரிழந்தார் .! | Sl Ltte War Karuna Amman Ponnayya Selvarasa Died

இந்நிலையில் நீண்டகாலமாக வெள்ளவாய பகுதியில் வர்த்தக நிலையங்களை நடாத்தி வந்த பொன்னையா செல்வராசாவை கடத்தி கப்பம் கோரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அங்கு பணிபுரிந்த செல்வதீபனை விசாரணை செய்யவேண்டும் என்ற போர்வையில் உரிமையாளர் செல்வராசாவும் விசாரணைக்கு வரவேண்டும் என்று இருவரையும் வெள்ளைவானில் வலிந்து கடத்தி சென்றனர் .

முதல் கட்டமாக ஐந்து கோடி பணம் கோரப்பட்ட நிலையில் அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என்று கூற 20 தினங்களுக்கு பின்னர் இரண்டு கோடி பணம் கோரப்பட்டது.

அதற்கும் அவ்வளவு பணம் தன்னிடமில்லை என்று உரிமையாளர் தெரிவிக்க மூன்றாம் கட்டமாக ஒரு கோடி பணம் கோரப்பட்டது.

இதனை செலுத்தவறினால் இருவருக்கும் மரண தண்டணை என்பதை ஆயுததாரிகள் உறுதியாக தெரிவித்து விட்டனர்.

செல்வராசாவின் குடும்பத்தாருடன் தொடர்பில் இருந்த ஆயுததாரிகள் தாம் கோரும் பணம் குறித்த நாட்களுக்குள் வழங்க வேண்டும் என்று கடும் தொனியில் தெரிவித்துள்ளனர்.

குடும்பத்தாரும் பல போராட்டங்களுக்கு பின் பணம் சேகரித்து அவர்கள் கோரும் பணத்தை வழங்கிய பின்னர் உரிமையாளர் செல்வராசாவை விடுக்க இணக்கம் தெரிவித்தனர்.

செல்வதீபனுக்கு மரண தண்டனை அல்லது தொடர்ந்து தடுத்து வைக்குமாறு மேல் இடத்தில் இருந்து உத்தரவு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

செல்வராசாவின் தாழ்மையான கோரிக்கைக்கு பின்னர் கடந்த 2007 ஆம் ஆண்டு ஏழாம் மாதம் 28 ஆம் திகதி இரவு 12 மணியளவில் நித்திரையில் இருந்த போது நான்கு பேர் கொண்ட ஆயுததாரிகள் வந்து இருவரையும் கண்களை கட்டி அழைத்து சென்றனர்.

இருவரையும் ஒரு ஹயஸ் வாகனத்தில் ஏற்றி பொலனறுவை தொடருந்து நிலையத்தில் வைத்து விடுவித்தனர்.

இது தொடர்பில் அந்தக்காலத்தில் உயிர் தப்பிய செல்வராசா தெரிவித்தவை வருமாறு,

எங்களிடம் இருந்த அடையாள அட்டை பறிக்கப்பட்ட போதும் மீள ஒப்படைக்கவில்லை. இருவருக்கும் தலா ரூபா 1000 மட்டும் வழங்கப்பட்டது.

இங்கு வந்து மீண்டும் உயிருடன் செல்லும் நபர்கள் நீங்கள் தான் என்றும் விரைவாக தப்பிச் செல்லுமாறு கூறி விடுத்தனர்.

பொலனறுவையில் இருந்து அதிகாலை 2 மணிக்கு கொழும்புக்கு செல்லும் தொடருந்தில் ஏறி அச்சத்துடன் இருவரும் கொழும்புக்கு வந்து சேர்ந்தோம்.

பத்து தினங்கள் கொழும்பில் மறைவிடத்தில் இருந்து விட்டு எனக்கு ஆவணம் வந்தவுடன் செல்வராசா கொழும்பில் உள்ள தனது வீட்டுக்கு செல்ல கிராம சேவையாளர் உறுதிப்படுத்திய ஆவணத்துடன் திருகோணமலைக்கு சென்று அங்கு கப்பல் போக்குவரத்துசேவையில் பணிபுரிந்த சுபச்செல்வன், ஜெயதாஸ் ஆகியோரின் உதவியுடன் கப்பல் மூலம் யாழ்ப்பாணம் வந்து சேர்ந்தேன்.

அடுத்த ஆண்டு 2008 ஆம் ஆண்டு வெள்ளவாயவில் வைத்து சகோதரன் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு இன்று வரை அவர் தொடர்பான தகவல்களின்றி உள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
மரண அறிவித்தல்

Pussellawa, கொழும்பு, ஜேர்மனி, Germany, Scarborough, Canada

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மறவன்புலோ, Wembley, United Kingdom

19 Oct, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, கொழும்பு, London, United Kingdom, Toronto, Canada

30 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மாத்தளன், ஆனைக்கோட்டை

05 Nov, 2018
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

14 Nov, 2024
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு குறிகட்டுவான், கனடா, Canada

03 Nov, 2013
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம்

02 Nov, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024