கனடாவில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இலங்கையர்...!
கனடாவில் இலங்கை நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டொராண்டோ நகரில் பெண்களை ரகசியமாகப் படம்பிடித்த குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றவியல் அச்சுறுத்தல்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், டொராண்டோவின் யூனியன் ஸ்டேஷன் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களின் அனுமதியின்றி அவர்களைப் படம்பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாகக் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இவர், கடந்த பெப்ரவரி நான்காம் திகதி 2026 அன்று ஒன்டாரியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இவர் மீது நான்கு விதமான குற்றவியல் அச்சுறுத்தல் (Criminal Harassment) வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கனடிய சட்டம்
அத்தோடு, பாதிக்கப்பட்ட பெண்கள் இதனைத் தட்டிக்கேட்டபோது அவர்களிடம் குறித்த நபர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக, கடந்த மே மாதம் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரையும் இவர் படம்பிடித்து அவதூறான கருத்துகளைத் தெரிவித்ததாகக் காவல்துறையினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் குறித்த மேலதிக முனைப்பாடுகள் இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதால், இது குறித்த தகவல்களை வழங்குமாறு டொராண்டோ காவல்துறை பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
கனடிய சட்டத்தின்படி இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாகப் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |