இலங்கையில் இணையவழி விசா முறைமை : வெளியான தகவல்
இலங்கைக்கு (Sri Lanka) இணையவழி விசா வழங்குவதை உடனடியாகத் தொடர முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் (Tiran Alles) தெரிவித்துள்ளார்.
குடிவரவுத் திணைக்களத்தின் கணனி முறைமைகளானது புதிய நடைமுறைகள் மற்றும் கட்டணங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதால் நீதிமன்றத்தின் உத்தரவின்படி பழைய முறைமையின் கீழ் விசா வழங்குவதை உடனடியாகத் தொடர முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், அண்மையில் திருத்தப்பட்ட ஆன்லைன் இணையவழி சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும் மற்றும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கி இருந்தது.
இணையவழி விசா
முன்மொழியப்பட்ட இந்த சட்டம் குறித்து இலங்கையில் பல்வேறு தரப்பினரால் முக்கிய கவலைகள் எழுப்பப்பட்ட நிலையில், இதில் இணையத்தில் கருத்து வேறுபாடுகள் மீது கூறப்படும் ஒடுக்குமுறையும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

மேலும், இணையவழி விசா முறைமையில் திருத்தங்கள் பல மேற்கொள்ளவுள்ளதாகவும் மற்றும் திருத்தப்பட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமெனவும் டிரான் அலஸ் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |